Friday, December 31, 2010

எண்ணி எண்ணி துதி செய்வாய்

2010 வருடத்திற்க்கான கடைசி செய்தியை கொடுக்கும்படி எங்கள் சபை  போதகர், போதகர்  NEWTON அவர்களை கேட்டுக்கொண்டார்.
செய்தி : இந்த அதிகாரத்தை மோசேயின் பாடல் என்று சொல்லலாம். அது உபாகமம் 32 .இதிலே எப்படி கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை ஆச்சரியமாய் , அதிசயமாய்  வழி நடத்தினார் என்று மோசே சொல்லி இருக்கிறான் .
உபாகமம் 32 : 10 - 12
10. பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.
11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
12. கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

இங்கு ஒரு மனிதனை நடத்தியது போல என்றும், அவனை, அவனை என்றும் பார்க்கிறோம். அவன் என்பது யாக்கோபின் புத்திரரான இஸ்ரவேல் புத்திரரை குறிக்கிறது. பழைய ஏற்பாடு  காலத்திலே தேவன் கொஞ்சம் பேரை தெரிந்துக்கொண்டு அவர்களோடு உறவாடினார் அவர்கள் தான்  இஸ்ரவேல் புத்திரர் என்று பார்க்கிறோம், ஆனால் புதிய ஏற்பாடு காலத்தில் தேவன், யாரெல்லாம் கர்த்தரை தேடுகிறார்களோ அவர்களோடு உறவாடுகிறார் . இந்த உண்மை இஸ்ரவேலருக்கும்,தேவனை தேடுகிற  நமக்கும் பொருந்தும் . மேற்கூறிய வசனத்திலே 3 காரியங்களை தேவன் செய்தார். அதை மட்டும் தியானிக்கலாம் .  தேவன் யாக்கோபை தெரிந்து கொண்ட முறை வித்தியாசமானது அருமையானவர்களே. 10 வது வசனத்தை படித்தால்...
பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார் ...உணர்த்தினார் என்று பார்க்கிறோம் .  ஆங்கில வேதாகமத்திலே உணர்த்தினார் என்ற வார்த்தை  INSTRUCTED HIM ( KING JAMES ), SCANNED HIM (AMPLIFIED)என்று  சொல்லப்பட்டிருகிறது.SCANNED HIM என்றால்  X-RAY வை  போல  SCAN செய்தார்  என்றேபொருள்படுகிறது.
ஆதியாகமம்  28:11  
  ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.  12. அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.... 

தேவன், யாக்கோபை அவன் தன்  சகோதரனுடைய   ஆசிர்வாதத்தை களவாடி திருட்டளவாய் ஓடிப்போகும்போது   வானாந்திரமான இடத்திலே வானாந்திரமான மனநிலையிலே ஒரு தரிசனத்தை கொடுத்து அவனை சந்திப்பதாக பார்க்கிறோம். அந்த இடம் பாழான ஒரு இடம் , இது தான் அவன் வாழ்க்கையில் தேவனுடைய முதலாவது சந்திப்பு.அருமையானவர்களே யாக்கோபுக்கு மட்டுமல்ல தேவன்  நம்மையும் கூட தெரிந்துக்கொண்ட விதம் இப்படித்தான், பாழான இடத்திலே தேவன் நம்மை சந்தித்தார். அப்படிப்பட்ட நிலையிலே தேவன்  நம்மை கண்டுபிடித்தார். வேதம் சொல்லுகிறது உணர்வுள்ளவன் இல்லை , ஒருவனாகிலும்  இல்லை என்றும்,. மாடு தான் முன்னனையையும், கழுதை தன் எஜமானனையும்  அறியும், ஆனால் மனிதராகிய  நாமக்கோ .... ?  ......உணர்வு இல்லாத நிலை ...
நமக்கு கர்த்தரை யார் என்று உணர்த்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நம்மை கண்டு பிடித்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . நாம் யார் என்பதை நமக்கு  உணர்த்தின தேவனாகிய கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  
கண்டுபிடித்தது  மட்டுமல்ல 
 நடத்தினார் ,உணர்த்தினார் , காத்தருளினார் .

ஆதியாகமம் 24 : 48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

தன் எஜமானாகிய ஆபிரகாமின் குமாரனுக்கு பெண் தேட எலேயேசர்  புறப்பட்டு  செல்கிறான், இந்நாட்களில்  இருப்பது  போல அப்போது  MARRIAGE BEURO இல்லை, ஆனால்...
அவன் தேவனிடத்தில் ஜெபிக்கிறான், அவன் தண்ணீர்  கேட்கும்  போது  அவனுக்கும், அவன் ஒட்டகங்களுக்கும்  தருவேன்  என்று சொல்லும் பெண்ணே கர்த்தர்  தன் எஜமானனுடைய  குமாரனுக்கு  நியமித்த  பெண்  என்று தன் இதயத்திலே நினைக்குமுன்னே கர்த்தர் அதை வாய்க்க செய்தார்.  அவனை நேர் வழியாய் கர்த்தர் நடத்தினார். நம்மையும் கூட இந்த ஆண்டு கர்த்தார் நேர் வழியாய் நடத்தினார். காரியங்களை வாய்க்க செய்தார் . தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யாத்திராகமம் 13 : 21 
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்....
இஸ்ரவேல் ஜனங்களை தேவன் இப்படித்தான் ஆச்சரியமாய் நடத்தினார். பகலிலே  மேகம் ஸ்தம்பமாய் நின்றது நிழல் கொடுக்க...! . இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் நின்றது வெளிச்சம் கொடுக்க... ! இப்படி இயற்க்கை சக்திக்கு மேலாக அவர்களை அதிசயமாய் நடத்தினார் . நம்மையும் கூட அப்படித்தான் எதிர்ப்பாராத உதவிகள், ஆச்சரியமான வழி நடத்துதல்  (SUPPER NATURAL   GUIDANCE OF LORD ...) நம்மை அதிசயமாய் நடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
யாத்திராகமம் 15 : 13  
 நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
கர்த்தர் ஒருவரே நடத்தினார் ... பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக... சபைக்கு , வசனத்திற்கு நேராக வழிநடத்திய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல....
கழுகு தன் கூட்டைக் கலைத்து... ஏன்  கழுகு  தன் கூட்டை  கலைக்க  வேண்டும்...? அதற்கு  என்ன  பைத்தியமா  .. இல்லை அருமையானவர்களே, கூட்டை  கலைப்பது  அழிப்பதற்கு  அல்ல  , குஞ்சுகள்  பறக்க  கற்றுக்கொள்ள  , பெலப்பட  ..
இந்த வருடத்திலே கர்த்தர் நம்மிடத்திலே  இருந்து  சிலவற்றை  பிடுங்கி  இருக்கலாம்  ...அது உறவுகளாக இருக்கலாம்  , வேலையாக  இருக்கலாம்  . எதுவாய்  இருந்தாலும்  அது  நம்மை நிலை  நிறுத்த, பெலப்படுத்தத் தான்
நம்மை பெலப்படுத்திய  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யூதா 1 :24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,...

வழுவாதபடி - எதிலிருந்து  ...? விசுவாசத்திலிருந்து வழுவாதபடி  நாமை  காத்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ...
நல்ல போராட்டத்தை  போராடினேன்  என்று சொல்லத்தக்கதாக  கர்த்தர் நம்மை காப்பார்
.
என்  கால் சறுக்குகிறது என்று சொல்லும்போது  கர்த்தர் என்னை  தாங்கினார்  ...என்று பக்த்தன் சொல்லுகிறான் .
நம்மை கண்மணிபோல  காத்த  தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அவர் நடத்திய நேர் வழிக்காக, அவர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணி  தேவனாகிய  கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் ...

   உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்

Wednesday, December 29, 2010

மோர் மிளகாய்

 ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் மாலை 7 மணிக்கு எங்கள் சபையிலே  வேதப்பாடம் (பைபிள் STUDY) உண்டு . ஆனால் நேற்றிலிருந்து புதிய வருடத்திற்க்கான ஆயத்த கூட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தது. நானும் என்னை ஆயத்தப்படுத்துவதற்காக சென்றிருந்தேன். தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும்போது போதகர் சொன்ன கருத்து என்னை உற்ச்சாகப்படுத்தியது, அது சமையலை  பற்றியது . நம் உணவு வழக்கத்திலே சில உணவு வகைகளை ஊற வைத்து பின் சமைப்பது உண்டு , மோர் மிளகாய் எடுத்துக்கொண்டால் , அந்த மிளகாய்  ஊற ஊற அதின் கார தன்மை மாறி வேறே சுவை வந்து விடுகிறது, அது ஊறிவிட்டால்  பிறகு அது தன் பழைய காரத்தன்மைக்கு திரும்புவதில்லை.  அதே போலத்தான் நாமும் தேவனோடு இணைந்து  இருக்க , தேவனுக்குள்ளாக எந்த அளவுக்கு இருகிறோமோ அவ்வளவு  நம்முடைய தன்மைகள் மாறி  தேவனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்துவோம் .... தேவனுக்குள் நாம் ஊற, ஊற அவருடைய சத்துவங்களை நாம் உட்கிரகித்து கொள்வோம் . யோசித்துப்பார்த்தேன் எவ்வளவு உண்மையான கருத்து இது .  நாம் தேவனோடு இருக்க , தேவனுக்குள்ளக இருக்க நம்முடைய QUALITIES  மாறி விடுகிறது ....இதற்க்கு என்னை நான் விட்டுகொடுக்க தேவன் எனக்கு உதவி செய்வாராக ....ஆமென்.   

Saturday, December 25, 2010

Attempt great things for God

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ...
இன்று கிறிஸ்துமஸ் செய்தியை இங்கே  கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என் மனதில் உள்ள வருத்தம் என்னை அனுமதிக்கவில்லை . நான் என் வருத்தத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன் போலும். இருக்கட்டும். இன்று நான்  என் வாழ்க்கைக்கு தேவையான 2 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டேன் . அதில் ஒன்றை மட்டும்  பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இன்று  நான் கேட்ட கிருஸ்துமஸ் செய்தியை இங்கே கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். இதை பற்றி யோசிக்கும் போது  கேள்வியின் நாயகனான எனக்கு  சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது, அது ஊழியம் செய்யும் தேவ மனிதர்களின்  பாடுகளை பற்றியது. அவர்களுக்கு என்ன தோல்வி வந்தாலும் தேவன் ஜெயிகிறவர் என்று அவர்கள் மற்றவரை தேற்றத்தான் வேண்டும். அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்துக்காக ஜெபிக்கத்தான் வேண்டும், அதற்காகவே தேவன் அவர்களை ஊழியராக தெரிந்துக்கொண்டார்.  ஒரு சிறிய பிரச்சனை என் சின்ன முயற்சியை தோற்கடித்துவிட்டது.  சரி அந்த  எண்ணம்  என்ன என்று நீங்கள் கேட்கலாம் .
வில்லியம் கேரி (இவரை பற்றி நான் கேள்விப்பட்டது ) என்னும் மிஷினரி தன் நாட்டை விட்டு தேவனுடைய அழைப்பிற்கு இணங்கி நம் நாட்டிற்க்கு வந்தார், ஊழிய பாதையிலே தன் மகனை பறிகொடுத்தார். இறந்த தன் மகனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாத நிலை. தானே இறந்து கிடந்த தன் மகனை அடக்கம் செய்தார், இதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.... அவரது மனைவியோ  ஓயாமல் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பாராம்.ஆனால் இவரோ பக்கத்துக்கு அறையில் அமர்ந்து வேதாகமத்தை (BIBLE) வங்காள (BENGALI) மொழியிலும், சமஸ்கிரதத்திலும் (SANSKRIT ) மொழி பெயர்த்தார்.... யோசித்துப்பார்த்தேன்...  என்ன மனநிலை , எந்த சூழ்நிலை , எத்தனை கடினமான வேலை.  எப்படி செய்திருக்க முடியும் ?   " Expect great things from God; attempt great things for God "  இது  அவர் அடிக்கடி பயன்படுத்தும் அவரது வாக்கியம் .
என்ன ஒரு அர்ப்பணிப்பு அவருக்கு ... ஒருவேளை இதை உணர்த்துவதக்க்காகத்தான் எனக்கு வருத்தமான இந்த சூழ்நிலையோ ?
புனித வெள்ளி மட்டுமல்ல , கிறிஸ்த்துமஸ் கூட கிறிஸ்துவின் தியாகத்தையே காட்டுகிறது ...

Sunday, December 19, 2010

சாட்சி ஆராதனை ...

இன்று எங்கள் சபையில் சாட்சி ஆராதனை ...
              குடும்பம் குடும்பமாக தங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வோருவரையும் அறிமுகம் செய்துக்கொண்டு,  கர்த்தர் கடந்த ஆறு மாதத்தில்  செய்த நன்மைகள் மற்றும் ஜெபக்குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் ...இப்படி வருடத்திற்கு 2 சாட்சி ஆராதனை உண்டு ...
இந்த சாட்சி ஆரதானை மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவதுண்டு, காரணம்  நான் என் அலுவலக பணியினிமித்தம் 2 ஆண்டுகளாக சபைக்கு செல்ல இயலாத நிலை ஏற்ப்பட்டது. அந்த நேரத்தில் ஏற்கனவே தேவனைப்பற்றியும், சபையைப்பற்றியும் என் உள்ளத்தில் உள்ள பல கேள்விகள் என் உள்ளத்தில் வேர்விட்டு ஆலமரம்போல வளர்ந்துவிட்டிருந்தது. மீண்டும் எனக்கு ஞாயிறு அன்று ஒய்வு கிடைத்தும்  சபைக்கு செல்ல முடியவில்லை. என் கேள்விகள் என்னை தடுத்து நிறுத்தியது. மீண்டும் சபைக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். நான் சபைக்கு சென்றேன்,  அந்த வாரம் சாட்சி ஆராதனை. என் குடும்பத்தின் பெயர் அழைக்கப்பட்டது. நான் என்ன சொல்லுவேன். ஏற்கனவே என் மனதிலே கேள்விகள், தேவன் எனக்கு நன்மைகள் செய்யவேயில்லை என்ற நினைப்பு வேறு, பொய் சொல்லக்கூடாது, பொய் சொல்லுவது எனக்கு பிடிக்காது, நான் தவறாக ஏதாவது சொல்லிவிட்டால் அது மற்றவர் மனதிலே கேள்விகளை ஏற்ப்படுத்திவிடக்கூடும், எனவே என்ன நான் சொல்ல முடியும் ?  எப்படி  நான் சொல்லுவது ?    இப்படி என் மனதிலே குழப்பம் அடைந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது.
                என்னுடைய முறை வந்தபோது  என் மனதில் தோன்றிய அந்த வசனத்தை நான் சொல்லி விட்டு  போய் அமர்ந்து கொண்டேன் . ஆனால் தேவன் என்னை ஒரு நோக்கத்தோடுத்தான் அழைத்திருந்தார் என்று எனக்கு அன்று தெரியவில்லை. நான் சபை நடுவே, கர்த்தருடைய சந்நிதியிலே, பரிசுத்தவான்கள் முன்னிலையிலே சொன்ன அந்த வார்த்தையை, அந்த வசனத்தை தேவன் கனப்படுதினார்.  அந்த வார்த்தை தான்  இந்த வசனம்     " நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் தேவனுடைய சுத்த  கிருபை " .
அதன் பிறகு தேவன் என்னோடு இடைபட ஆரம்பித்தார். இந்த வார்த்தையை சொல்ல எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று நீங்களே இந்த வார்த்தையை சொல்லிப்பர்த்தால் தெரியும். ஆனால் தேவன் என் உள்ளத்தை மட்டுமே பார்த்தார். பதில் கொடுத்தார். பதில் கொடுக்கும் என் தேவனுக்கு நன்றி.  எனவே தான்  இந்த சாட்சி ஆராதனையை  மகிமை பொருந்திய ஒன்றாக நான் கருதுகிறேன்.


           உங்கள் கருத்துக்களை  prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் ...

Monday, December 13, 2010

God unlimited...


He is the God of  both the mountains and the valleys
He is God of  near  and far
He is God of multitudes and individuals as well
He is God of not only strong ones but also weak
His voice is thunderous and yet could be small and still
He is  magnificent, greater than the Universe in size yet zoom Himself into my heart size..
                                                                                                                                  His name is Jesus

கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாம் ...!

இன்று ஞாயிறு , ஆம் வழக்கம் போல சபைக்கு, ஏற்கனவே நேற்று இரவு தேவனுடைய இடைப்படுதல் என்னை உடைத்துவிட்ட நிலையில் தேவன் என்னிடத்தில் கிரியை செய்ய என்னை நான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்.
ஆராதனை வேளையில் ஒரு பாடல்
                                                நீர் மாத்திரம் போதும் எனக்கு-
 போதகர் சொன்னார் -இந்த வார்த்தை உள்ளத்திலிருந்து வந்தால் அதுத்தான் நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை - ஆம் எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை.

இன்று செய்தி கொடுக்க சபை போதகர், pastor NEWTON.அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதோ செய்தி :                 ஏசாயா (ISAIAH) 58 :12 
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

நீ கட்டுவாய் - தேவன் உலகத்தை படைக்கும்முன் உலகத்தை அவர் மனதிலே பார்த்தார், வெளிச்சத்தை அவர் மனதிலே பார்த்தார், மனிதனை அவர் மனதிலே பார்த்தார் , இல்லாதவற்றை மனதிலே பார்த்து  அதை  படைத்தார், அதே போலத்தான் நான் கட்டவேண்டும் என்று தேவன் பார்கிறார் .
நீ கட்டுவாய் - இங்கு கட்டுவது என்பது ஒரு கட்டிடத்தை கட்டுவது அல்ல .ஆனால் உருவாக்குவது என்பதை குறிக்கிறது.
நீ  கட்டுவாய் ... கட்டுவாய் அல்லது கட்டப்படுதல் என்ற வார்த்தை   OKIDOME - என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.
   OKIDOME  என்றால் BUILDING UP  பொருள் , ஆங்கிலத்திலே  EDIFICATION - EDIFICE  என்று  சொல்லுகிறார்கள்.

 சரி  முதலாவதாக   -    1 கொரிந்தியர்(CORINTHIANS ) 14 :4 
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். மேல் வீட்டில், கொர்நேலியு வீட்டில் , எபேசு  பட்டணத்தில் காத்திருந்தவர்களை தேவன் நிரப்பினார், அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்  என்று பார்க்கிறோம், அவர்கள் கட்டப்பட்டார்கள். நம்மை கட்டுவதற்கு தேவன் வைத்திருக்கிற SKETCH - PLAN தான் அந்நிய பாஷை.
ஒரு ARCHITECT எப்படி ஒரு கட்டடம் கட்டுவதற்கு PLAN செய்கிறார், அந்த கட்டிடம் வெளியே ,  உள்ளே ,  படிக்கட்டுகள் ,  அறைகள்,  வெளித்தோற்றம்  என்று எப்படி PALN தருகிறாரோ அப்படித்தான் .அதேபோல்தான். நமக்குள்ளே நாம் கட்டப்பட தேவன் தரும் PLAN தான் அந்நிய பாஷை.
அந்நிய பாஷை பேசுகிறதை தடை செய்யக்கூடாது .
நான் கட்டபடுகிறேனா ? நான் தனியே எனக்குள்ளே கட்டப்பட்டால் ,நான் மற்றவர்களை கட்டி எழுப்ப முடியும் .
நான் மட்டும் கட்டப்பட்டு மற்றவர்கள் கட்டபடாமல் இருந்தால் அதற்கு பெயர்  குட்டிச்சுவர் - நாம் மற்றவர்களோடு இசைவாய் கட்டப்பட வேண்டும் 
அந்நிய பாஷை பேசினால் - பக்திவிருத்தி உண்டாகும்
அந்நிய பாஷை பேசினால் - தன்னையே கட்டமுடியும்
அந்நிய பாஷை பேசினால்- தேவனோடு ரகசியங்களை பேசமுடியும் 

 இரண்டாவதாக          1 கொரிந்தியர்  (CORINTHIANS ) 14:3 
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

                                           எபேசியர் (EPHESIANS )  4:12-13 
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
 
இங்கே குறிபிடுகிற 5 வித ஊழியங்களும் சபை பக்திவிருத்தி உண்டாகவே இருக்கிறது .இது தேவனுடைய ஈவு .
அதில் ஒன்று தீர்க்கதரிசனம் .
தீர்க்கதரிசனம் என்ன செய்கிறது ?
மனுஷரை கட்டி எழுப்புகிறது , தீர்க்கதர்சனம் ஒரு ஈவு .
எதற்கு நாமில் பலர் தீர்க்கதரிசனத்தை நாடி ஓடுகிறார்கள்  ?
1 . ஆதாயத்திற்காக
2 . ஏதாவது ஒன்றை தெரிந்துகொள்ள .
தீர்க்கதரிசனம் பக்தி விருத்தியை உண்டாக்க வேண்டும் .
நம்மில் 2 வகை மக்கள் உண்டு
1 . எல்லாவற்றிக்கும் தீர்க்கதரிசனத்தை நாடுவது
2 . தீர்க்கதரிசனமே வேண்டாம் .
நாம் BALANCED ஆக இருக்கவேண்டும் .
                                           1 கொரிந்தியர் (CORINTHIANS) 14:1 
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்- தீர்க்கதரிசனம் சொல்லுவது கத்தி மேல் நடப்பது போல - தேவனுடைய வார்த்தையை சரியாக சொல்லவேண்டும் .
                                          எபேசியர் (EPHESIANS ) 4:29 
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
இந்த வசனம் எபேசு சபைக்கு எழுத்தப்பட்டது.
                                          வெளிபடுத்தின விசேஷம் (REVALATION ) 2:2 
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
இவ்வளவு நல்ல காரியங்களை உடைய எபேசு சபை - அதின் வாயிலே கெட்ட வார்த்தை
கெட்ட வார்த்தை பக்திவிருத்தி உண்டாக்காது . நல்ல வார்த்தை உண்டானால் அதையே பேசுவோம்.
                                        பிலிப்பியர் (PHILIPPIANS )  4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
வேதம் சொல்லுகிறது இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் .
அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்- நல்லவைகளை சிந்திப்போம் . நல்ல 
நினைவுகள் நல்ல வார்த்தைகளை பேசும் .
இயேசுவின் பாடுகளின் பொது பேதுருவை மற்றவர்கள் பார்த்து இவனும் அவர் சிஷர்களில் ஒருவன் என்றார்கள் . ஏன் அப்படி சொன்னார்கள், அவன் இயேசுவோடு இருந்து அவன் பேசுகிற பேச்சு இயேசுவை போல மாறியிருந்தது .
இத்தனை வருடம் தேவனோடு இடைபடும் நம் வார்த்தையும் கூட தேவனுடைய வார்த்தையை போலத் தான் இருக்கவேண்டும் .
                                        எபேசியர் EPHESIANS 5 :4 
 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
சில நேரங்களில் நாம் கவனித்திருக்ககூடும் காகங்கள் நம் வீட்டின் மேல் எச்சம் செய்து விடும் , அதில் சில விதைகள் இருக்கும் . கொஞ்சம் காலம் கழித்து அது ஒரு செடியாய் வளரும், அது வளர்ந்து வீட்டின் சுவரை உடைக்கும் .
நம் கட்டடத்தை உடைக்கும் எந்த காரியத்தையும் நாம் அனுமதிக்க வேண்டாம் .
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
இதை தான் சங்கீதக்காரன்  சொல்லுகிறான் 
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,.....
ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். பக்திவிருத்தி உண்டாக பேசுவோம் .


 மூன்றாவதாக              ரோமர் (ROMANS )14 : 19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
சமாதானத்தை நாடக்கடவோம் .
                                           1கொரிந்தியர் (CORINTHIANS) 8:1 
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
நம்முடைய அறிவு நமக்கு இறுமாப்பை உண்டாக்கும் - அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்
                                           சங்கீதம் (PSALM ) 34:14 
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
சமாதானத்தை தேடு ...
                                          ரோமர் (ROMANS ) 12: 18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
                                          எபிரெயர் (HEBREWS)12 :14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
யாவரோடும் சமாதானத்தையே நாடுங்கள்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக அந்நிய பாஷையை பேசுவோம்.
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக தீர்க்கதரிசன வரத்தை நாடுவோம்
நாம் கட்டப்பட - பக்திவிருத்தி உண்டாக சமாதானத்தை நாடுவோம் ....
 தேவன் நம்மை கட்டி எழுப்புவாராக - ஆமென் .


                உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்

Saturday, December 11, 2010

உடைந்த உள்ளத்திலிருந்து...

                      இன்று மதியத்திலிருந்து என் இதயத்தில் ஒரு பாரம் , என்னை இருக்கவிடவில்லை ,நான் அப்படி என்ன செய்தேன், அதிகமாக கோபப்பட்டேன், பொறுமையை இழந்தேன் என்பது அப்போது தான் தெரிந்தது.இன்று 2nd Saturday என்பதால்  திரு.சுந்தர் ராஜ்  அவர்களுடைய  வீட்டில் ஜெப கூடுகை இருந்தது, ஆரம்பத்திலிருந்தே தேவன் இடைப்பட ஆரம்பித்தார், நான் என்னுடைய கோபத்துக்காக ஜெபிக்க வேண்டும என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், ஆனால் ஜெபத்தை நடத்தியவரோ என்னுடைய அல்லது நான் என்னக்காக செய்ய வேண்டிய ஜெபத்தை அவர் செய்தார், நான் கோபப்படும்போது என்னுடைய பொறுமையை இழந்து வார்த்தைகளை கொட்டிவிடுகிறேன். இதற்க்கு காரணம் நான் முடிந்தவரை  சரியாக இருக்க வேண்டும என்று நினைப்பது, அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும், தவறில்லை ஆனால் நான் அவ்வாறு நினைப்பதால் மற்றவர்கள் சிறு தவறு செய்தால் கூட என்னால் பொறுக்க முடியவில்லை.அடுத்தவர்களும் நான் நினைபதுபோல் இருக்கவேண்டும் என்ற கட்டயம் இல்லையே. அடுத்தவர்களை கேட்டால்தான்   தெரியும் நான் என்ன தவறு செய்கிறேன்  என்று.
                    நேரம் வந்தபோது என்னுடைய ஜெபக்குறிப்பை நான் சொன்னேன். அதற்க்கு அந்த தேவ மனிதனோ கோபத்திற்கு முக்கிய காரணம் பெருமை என்றார். நான் என்ற எண்ணம், மட்டுமல்ல, ஒரே விஷயத்தை(தவறை ) திரும்ப திரும்ப யோசிப்பதும் இதற்கு காரணம் என்று சொன்னார். மிக சரி , ஆம் நான் என்ற எண்ணம் எனக்குள் இல்லை என்ற எண்ணம் எனக்கு, மன்னிக்கிறேன் ஆனாலும் திரும்ப திரும்ப யோசிக்கிறேன் விட்டு விட இயலவில்லை காரணம் நான் சரி என்ற எண்ணம் தான் . ஜெபித்தோம் . என் இதயம் உடைந்தது . அழ வேண்டும  என்பது போலத்தான் இருந்தது. நான் எல்லாவற்றையும் சரி செய்ய நினைக்கிறன் ஆனால் அதற்காக காத்துக்கிடக்க வேண்டும், அதுத்தான் பிரச்சனை. பொறுமை இல்லை . இது தேவனை அனுமதிக்காமல் நானாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதை சுட்டிக்காட்டியது .

உங்கள் கருத்துக்களை,அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்பினால்                               prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் .

Wednesday, December 8, 2010

நான்- தேவனுக்கு தடைக்கல்லா அல்லது படிக்கல்லா ?

ÍÁ¡÷ 11 ÅÕ¼í¸û þÕì̦ÁýÚ ¿¢¨É츢§Èý, «ô¦À¡Ð ¿¡í¸û ´Õ ÀûǢ¢§Ä ¬Ã¡¾¢ì¦¸¡ñÊÕ󧾡õ. ´ÕÅ÷ Ó¸ò¨¾Ü¼ ´ÕÅ÷ À¡÷ì¸ÓÊ¡¾ ¿¢¨Ä «ýÚ. ¬í¸¡í§¸ ÌÚ째 ÍÅ÷. ¬É¡ø þó¾ ¦ºö¾¢ ±í¸û ¯ûÇò¾¢Ä¢Õó¾ ÍŨà ¯¨¼ò¾Ð  ±ýÚ ¦º¡ýÉ¡ø Á¢¨¸Â¡¸¡Ð. «ÉÚ ÁðÎÁøÄ þýÚõܼò¾¡ý. ¾¢Õ c.m.À¢§Ãõ ÌÁ¡÷ «Å÷¸û ÅÆí¸¢Â §¾ÅÛ¨¼Â ¦ºö¾¢ þ§¾¡.

²º¡Â¡ (isaiah) 6 : 1  ¯º¢Â¡ ს ÁýÁ¨¼ó¾ ÅÕ„ò¾¢ø, ¬ñ¼Å÷ ¯ÂÃÓõ ¯ýɾÓÁ¡É º¢í¸¡ºÉò¾¢ý§Áø Å¢üÈ¢Õì¸ì¸ñ§¼ý; «ÅÕ¨¼Â ÅŠ¾¢Ãò¦¾¡í¸Ä¡ø §¾Å¡ÄÂõ ¿¢¨Èó¾¢Õó¾Ð.

 ±ó¾ ´Õ ¸¡¡¢ÂÓõ Áí¸ÄÁ¡¸ò¾¡ý ¬ÃõÀ¢ìÌõ, ¬É¡ø þíÌ ÁðÎõ ²ý §¾Åý ´Õ «Áí¸ÇÁ¡É  ´Õ ¿¢¸ú¨Å ¬ÃõÀÁ¡¸ ¦¸¡Îì¸ §ÅñÎõ, ¯º¢Â¡ ს×ìÌõ, §¾ÅÛìÌõ ±ýÉ ºõÀó¾õ , ¯º¢Â¡ სŢý Áýò¾¢üìÌõ §¾Åý º¢í¸¡ºÉ¾¢ø Å¢üÈ¢ÕôÀ¾üìÌõ ±ýÉ ºõÀó¾õ .
¡÷ þó¾ ¯º¢Â¡ ს ....?

2 ¿¡Ç¡¸Áõ(chronicles) 26 ¬õ «¾¢¸¡Ãò¨¾ ÀÊò¾¡ø ¦¾¡¢Ôõ.
Ó¾ø źÉõ : À¾¢É¡Ú ž¡É ¯º¢Â¡¨Å «¨ÆòÐÅóÐ, «Å¨É «Åý ¾¸ôÀý Š¾¡Éò¾¢§Ä სš츢ɡ÷¸û.

3õ źÉõ : «Åý 52 ÅÕ„õ «Ãº¡ñ¼¡ý .
4õ źÉõ : «Åý ¸÷ò¾¡¢ý À¡÷¨ÅìÌ ¦ºõ¨Á¡ɨ¾î ¦ºö¾¡ý .
5õ źÉõ : «Åý §¾Å¨É §¾¼ Áɾ¢½í¸¢É¡ý. §¾Åý «ÅÛìÌ ¸¡¡¢Âí¸¨Ç Å¡öì¸î ¦ºö¾¡÷.
6õ źÉõ :  ÀÊò¾¡ø - «Åý ±¾¢¡¢Â¢ý 3 Ó츢ÂÁ¡É §¸¡ð¨¼¸¨Ç þÊòÐ, ±¾¢¡¢Â¢ý      ¿¡ðʧħ Àð¼½í¸¨Ç ¸ðÊÉ¡ý
7 õ źÉõ : 3 Ó츢ÂÁ¡É ±¾¢¡¢¸¨Ç ¦ÅøÄ §¾Åý «ÅÛìÌ Ð¨½ ¿¢ýÈ¡÷.
8 õ źÉõ : «õ§Á¡É¢Â÷ ¯º¢Â¡×ìÌ ¸¡½¢ì¨¸¸¨Ç ¦¸¡ñÎÅó¾¡÷¸û.
                  «ÅÛ¨¼Â ¸£÷ò¾¢ ±¸¢ô¾¢ý ±ø¨ÄÁðÎõ ±ðÊÉÐ.«Åý  Á¢¸×õ           ÀÄí¦¸¡ñ¼¡ý
9 õ źýõ : «Åý ±Õº§ÄÁ¢§Ä ã¨ÄÅ¡ºø¸û§ÁÖõ, ÀûÇò¾¡ì̸û §ÁÖõ ,
                  «Äí¸òÐ §¸¡Ê¸û §ÁÖõ §¸¡ÒÃí¸¨Ç ¸ðÊ  «¨Å¸¨Ç ÀÄôÀξ¾¢É¡ý.

1õ źÉò¾¢Ä¢ÕóÐ 9õ źÉõ ŨÃìÌõ À¡÷ò¾¡ø «Åý «ÅÛ¨¼Â ±øÄ¡ ±¾¢¡¢¸¨ÇÔõ, §¾ÅÛ¨¼Â Ш½ì¦¸¡ñÎ ¦ÅüÈ¢ º¢È츢ȡý ±ýÚ À¡÷츢§È¡õ, ¦ÅüÈ¢ , ¦ÅüÈ¢ ±íÌõ ¦ÅüÈ¢, «ÅÛ¨¼Â Ò¸ú ±øÄ¡ þ¼ò¾¢§ÄÔõ ÀÃÅ¢ÂÐ. ±ó¾ ¿¡ð椀 «Å÷¸û «Ê¨Á¸Ç¡¸ þÕó¾¡÷¸§Ç¡ «ó¾ ¿¡Î ŨÃìÌõ «ÅÛ¨¼Â Ò¸ú ÀÃÅ¢ÂÐ. «Åý Á¢¸×õ ÀÄí¦¸¡ñ¼¡ý , þý¦É¡Õ Å¡÷ò¨¾Â¢ø ¦º¡ýÉ¡ø «Åý ¿¡ð¨¼ ÅøÄÃÍ ¿¡¼¡¸ Á¡üȢŢð¼¡ý ±ý§È ¦º¡øÄÄ¡õ.
  «ÐÁðÎÁøÄ 10 ÅРźÉõ Ó¾ø 15 Ũà À¡÷ò¾¡ø «Åý «§¿¸õ ¬Î¸¨ÇÔõ , Á¡Î¸¨ÇÔõ , «Åü¨È ÀáÁ¡¢ì¸ ²üÈ ¬ð¸¨ÇÔõ ¯¨¼ÂÅɡ¢Õó¾¡ý , «Åý ¿¡ð椀 §¸¡ð¨¼¸¨Ç ¸ðÊÉ¡ý , ÐÃ׸¨Ç ¦ÅðÊÉ¡ý , Ţź¡Â¾¢§Ä «¾¢¸ ®ÎÀ¡Î ¯¨¼ÂÅɡ¢Õó¾¡ý. ¿øÄ Ôò¾ Å£Ãɡ¢Õó¾¡ý , «ÅÛìÌ Àá츢ÃÁº¡Ä¢Â¡É ¾¨ÄÅ÷¸§Ç 2600 §À÷. ს ܼ Ш½ ¿¢ýÚ Ôò¾õ ¦ºö ÁðÎõ 3,07,500 §À÷ þÕó¾¡÷¸û ±ýÚ À¡÷츢§È¡õ.
«ÐÁðÎÁøÄ «ÅÛ¼ý þÕó¾ÅÕ¸ÙìÌ ¬Ô¾õ ¦ºöÂ×õ , ¸ø ±¡¢¸¢È ¸Åñ¸¨ÇÔõ ¬Âò¾ôÀÎò¾¢É¡ý.
þýÛõ ¦º¡øÄ §À¡É¡ø «Åý ¦¾¡ð¼¦¾øÄ¡õ Å¡öò¾Ð . ±íÌõ ¦ÅüÈ¢ ±¾¢Öõ ¦ÅüÈ¢ , ¿¡ý ±¨¾ ¦ºö¾¡Öõ ¦ÅüÈ¢ , ¿¡ý , ¿¡ý , ¿¡ý ±ýÚ ¿¢¨Éì¸ ¬ÃõÀ¢ò¾¡ý,
16- 21 źÉõ
þýÛõ ´Õ ÀÊ §Á§Ä §À¡ö þ¨¾Ôõ ¦ºö§Åý ±ýÚ àÀí¸¡ð¼ §¾Å¡ÄÂò¾¢ø À¢Ã§Åº¢ò¾¡ý.¸÷òÕ¨¼Â ¬º¡¡¢Â÷ ±ýÉ ¦º¡øÄ¢Ôõ  §¸ð측Áø,§¸¡ÀÁ¡ö «Å÷¸Ù¼ý ¾÷¸õ ¦ºö¾¡ý. «Åý §¾ÅÛ¨¼Â ¬º¡¡¢ÂÕìÌ Å¢§Ã¡¾Á¡¸ §ÀÍõ§À¡§¾ «Å¨É §¾Åý «Êò¾¡÷ , «ÅÛ¨¼Â ¦¿üȢ¢ø ̉¼§Ã¡¸õ Åó¾Ð . «Åý º¡Ìõ ÁðÎõ §¾ÅÉ¢¼ò¾¢ø ÁÉõ ¾¢ÕõÀ¡Áø, ¿¡ý ±ýÈ ±ñ½õ ¦¸¡ñÎ Á¡¢òÐô§À¡É¡ý . ¿¡ý ±ýÈ ±ñ½õ «Å¨É §¾ÅÉ¢¼ò¾¢ø ¾¢ÕõÀ ÅÃÅ¢¼§Å¢ø¨Ä.

 þó¾ ¿¡ý ±ýÈ ±ñ½õ ¦¸¡ñ¼ ¯º¢Â¡ ÁýÁ¨¼ó¾ ÅÕ„¾¢§ø ¬ñ¼Å÷ ¯ÂÃÓõ ¯ýɾÓÁ¡É º¢í¸¡ºÉ¾¢ø Å¢üÈ¢Õì¸ ¸ñ§¼ý , «ÅÕ¨¼Â ÅŠ¾¢Ãò¦¾¡í¸Ä¡ø §¾Å¡ÄÂõ ¿¢¨Èó¾¢Õó¾Ð......
 ¿¡ý ±ýÈ ±ñ½õ ±ô¦À¡Ð º¡¸¢È§¾¡ «ô¦À¡Ð ¿¡õ §¾Å¨É , «ÅÕ¨¼Â Á¸¢¨Á¨Â, ¿¡õ ¿¢îºÂÁ¡¸ ¸¡½ÓÊÔõ ±ýÀÐ ¯ñ¨Á ...
¿¡ý ±ýÈ ±ñ½õ º¡¸ðÎõ, §¾ÅÛ¨¼Â Á¸¢¨Á ±ýÉ¢§Ä ¦ÅÇ¢ôÀ¼ðÎõ !


உங்கள்  கருத்துகளை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் ...

Sunday, December 5, 2010

அழைப்பு

இன்று ஞாயிறு நீங்கள் நினைப்பது சரி தான் . சபைக்கு சென்றேன்.
இன்று ஒரு புது வரவு , ஒரு குழந்தையை பிரதிஷ்டை(dedicate) செய்தார்கள். அப்பொழுது  போதகர்  பகிர்ந்துக்கொண்ட வசனம்
மத்தேயு 18 : 1 - 4
சீஷர்கள் இயேசுவிடம் பரலோகத்தில் யார் பெரியவன் என்று கேட்கிறார்கள்.
இயேசுவோ ஒரு பிள்ளையை நடுவிலே நிறுத்தி , நீங்கள் மனந்திருந்தி  பிள்ளைகளைப்போல்  போல் ஆகாவிட்டால் பரோலோக  ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்  என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் .என்றார் சொன்னார்.
4 ம் வசனம் - இந்த பிள்ளையைபோல தன்னைததாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் .
பிள்ளை கிட்ட அப்படி என்னப்பா இருக்கு தாழ்த்துவதற்கு ? .....பிள்ளைக்கிட்ட தன்னை உயர்த்துவதற்கு ஒன்றுமே இல்லை . இந்த பிள்ளையைபோல் நாம் நம்மை தாழ்த்துவோம் .    நல்ல செய்தி ....நம்மை  தாழ்த்துவதற்கு நமக்கு ஒரு நல்ல உதாரணம்...

இன்று செய்தியை பகிர்ந்து கொடுக்குமாறு திரு. அகஸ்டின் பாலன் அவர்களை போதகர் கேட்டுக்கொண்டார் .
செய்தி : மத்தேயு 4 : 21 அவர் அவர்களை விட்டுப்போகையில் ,வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் ,அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவைளிரிந்து ,தங்கள் வலைகளை பழுதுப்பார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு அவர்களையும் அழைத்தார் 
அழைப்பு ( calling ) என்ற பதம்  kaleo என்ற கிரேக்க வர்தையில்ருந்து வந்தது. இந்த kaleo என்ற வார்த்தைக்கு  3 விதமான பொருள் உண்டு  
kaleo -  calling  -  அழைப்பு   -  
 அழைப்பு  ஒன்றுதான் ஆனால் அழைப்பத்தின் நோக்கம் வேறு வேறு .

1 .விருந்துக்கு அழைப்பது - calling for the feast .
2. வேலைக்கு அழைப்பது - calling for the duty 
3. நியாயத்தீர்ப்புக்கு அழைப்பது  - calling for the judgment
இந்த 3 அழைப்புகளிலிருந்து நம்மை நாமே கேட்க வேண்டிய 3 கேள்விகள் உண்டு
1 நான் தானியே சப்பிடுகிறேனா ?
2 .நான் சரியாகத்தான் வேலை செய்கிறேனா ?
3 . நான் எல்லாக்கடனையும்  திருப்பி கொடுத்துவிட்டேனா ?
எதற்காக அழைப்பு ?
விருந்தை சாப்பிட்டுவிட்டு செல்வதற்க்கா ?
   சபைக்கு வந்து நல்ல வசனங்களை கேட்டு தேவனுடைய ஆசிவதங்களை பெற்று கொள்வதற்கா ?
நான் மட்டும் சப்பிடுகிறேனா ?
 enjoy பண்ணுவதற்காக  மட்டும் அல்ல,  வேலைக்கும் சேர்த்துத் தான் தேவன் நம்மை அழைத்து இருக்கிறார்
அழைப்பு வேலை செய்வதற்கும் தான்
2 வேலைகள் அங்கு செய்யப்படுவதை பார்க்கிறோம்
   1   மீன்பிடிக்க...
        ஆத்தும ஆதாயம்  செய்ய ... மத்தேயு 18 : 19
         மீன் பிடிப்பது  என்பது  ஒருவரை தேவனிடத்தில் சேர்ப்பது .
         சபையில் சேர்ப்பது. தேவனிடமாய் ஒருவனை நடத்துவது.

2  பழுதுப்பர்த்தல்  
பழுதுபார்த்தல் - repair என்ற வார்த்தை kartartizo என்ற  கிரேக்க வார்த்தையிலிருந்து  வந்தது - இதற்க்கு நிறைய பொருள் உண்டு . 
தேவனைப்பற்றிய அறிவு ஒருவனுக்கு இல்லை என்றால் அவனுக்கு கேடு , ஆனால் சபைக்கு வந்து பின்வாங்கிபோனால் அதிக கேடு அல்லவா ?
மீன்ப்பிடிக்க நிறையப்பேர் இருக்கிறார்கள்.......... பழுதுப்பார்க்க ?

இந்நாட்களில் அறுவடை செய்ய போவாஸ் போன்ற ஆட்கள் அதிகம் , ஆனால் சிந்திய  கதிர்களை பொறுக்க ரூத் போன்ற  நபர்கள் மிகவும்  அவசியம் .

ஆசரிப்புகூடாரம் மற்றும் தேவாலயத்தை எடுத்துக்கொண்டால் ஆசாரியர்கள் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். தங்களை சுத்திகரித்துக்கொண்டு , தங்கள்  உடைகளையும் சுத்தமாக வைத்துகொண்டு தேவனுக்கு பலியிடுவார்கள், இவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கூட பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்முன் அவர்கள் சுத்திகரிக்க ஒரு வெண்கலத்தொட்டி  அவசியம். ஆசாரியன் மக்களுக்காக  பரிந்துபேசும் போது தேவன் அவனை அடிக்க கூடாது , பலிகளால் அவன் அசுத்தப்பட்டு இருக்ககூடும், எனவே அவன் மீண்டும் ஒருமுறை தன்னை சுத்திகரிக்க வேண்டும cleansing for the cleansed must required .

சங்கீதம் 68 : 11     ஆண்டவர் வசனம் தந்தார் ,அதை பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி .
விதைப்பதற்கு அநேகர் ...  பிரசித்திப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி
அறுப்பதற்கு .....?
மீன் பிடிக்க அநேகர் ....
பழுதுப்பார்க்க .....?
எருசலேம் எப்படிக்கட்டபட்டது  என்று வரலாற்றைப்பார்தால் தெரியும்,
கி மு 575 - 535  செருபாபேல் எருசலேமைகட்டி எழுப்புகிறான்.
கி மு 455 - எஸ்ரா வசனத்தால் மக்களை கட்டி எழுப்புகிறான்.
கி மு 445 நெகேமியா , எருசலேமுக்கு அலங்கம் இல்லை , நெகேமியா 3 ம் அதிகாரத்தை படித்தால் தெரியும்  6 முறை கட்டினார்கள் என்று வருகிறது ஆனால் 35 முறை பழுதுப்பர்த்துக்கட்டினார்கள் என்று வருகிறது, பழுதுப்பர்த்துக்கட்டுதல் இங்கு ஒரு தனி நபர் செய்யவில்லை 38 நபர்கள்  42 குழுக்கள்  52 நாட்களில் கட்டி முடித்தார்கள், அந்த நாட்களிலும் இந்நாட்களில் உள்ளதுப்போல 3 வகை  மக்கள் இருந்தார்கள் ,
முதல் வகை  எவ்வளவு பணம் அல்லது பொருள் வேண்டுமானாலும் கொடுப்பார்கள் அவர்கள் வந்து வேலை செய்ய மாட்டார்கள்.   இரண்டாவது வகை கடினமாக வேலை செய்வார்கள். கிராமம் கிராமாக தேவனை சொல்லுவார்கள். தேவனுக்காக கடினமான காரியங்களை செய்வார்கள். மூன்றாவது வகை பொறுப்புடன் வேலை செய்பவர்கள் கொஞ்சம் பேரை சந்தித்தாலும் அவர்களுக்காக ஜெபிப்பது , தேவனோடிருக்கும் படி அவர்களை வழி நடத்துவது , அவர்கள் சோர்ந்து போனாலும் தேற்றுவது , பொறுப்புடன் வேலை செய்வது .
 இந்த மூன்றாவது வகை தான் பழுதுப்பார்ப்பது .
பழுதுபபார்பது அவ்வளவு  முக்கியமானதா . ஆம்  மிக மிக முக்கியமானது .

தேவாலயத்தில் உள்ள பொன் குத்துவிளக்கு
பசும்பொன்னால் அடிப்புவேலையாய்  செய்யப்பட்ட விளக்கு
பொன்னிறமான எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கு
வெண்ணிறமான பஞ்சு தான் அதற்கு திரியாக திரிக்க வேண்டும .
அந்த விளக்கை கொளுத்தும்  போது கருப்பு நிற திரி வரும் , அது அகற்றப்பட வேண்டும். அப்போது தான் அந்த விளக்கு நன்றாக எறியும். அந்த திரி பழுதுப்பார்க்கப்பட  வேண்டும் .

தேவன் உலகத்தை படைத்தார் அப்படியே விட்டு விடவில்லை ஒவ்வொரு முறையும் அதை நல்லது என்று கண்டார் , refine செய்ததாகவே பார்க்கிறோம் .மனிதனை அவன் எடுக்கப்பட்ட நிலத்தை பண்படுத்த சொல்லுகிறார். - பழுதுப்பார்தல்

ஏன் தேவன் மீன் பிடிப்பவர்களை தெரிந்துக்கொண்டார்  ?
மீன் பிடிப்பவர்களின் தன்மைகளை பார்ப்போம்
காத்திருக்குதல் 
மத்தேயு 13 : 48 ... அது நிறைந்தபோது ....
வலை நிறையும் வரை காத்திருக்க வேண்டும் .
காத்திருக்குதல் என்றால் நம்மால் தாங்க கூடாத பாரம் நம்மை அழுத்தும் போது நாம் எப்படி அமைதியாக இருக்கத்தான் வேண்டுமோ அப்படி காத்திருக்குதல்.
(crushing under the weight or abiding under )

 லுக்கா 5 : 5
......இராத்திரியெல்லாம் பிரயாசப்பட்டு ஒன்றும் கிடைக்கவில்லை  - விடா முயற்சி

யோவான் 21 : 2 ,3 .... நேரத்தை குறித்ததான அறிவு (knowledge about time )

சங்கீதம் 22  : 6 ....  நானோ ஒரு புழு (இயேசுவை குறிக்கிறது ) புழு தூண்டிலில் மாட்டப்படுவதற்க்கு, அது மீனை கவர்வதற்கு அல்ல , ஆனால் தூண்டிலில் இருக்கும் முள்ளை மறைப்பதற்கு . சிலுவையில்  மரிப்பதற்காக ஒரு சரிரத்தை ஆயத்தப்படுத்தினார் என்று சொல்லப்பட்டு இருப்பது , இதற்க்கு ஒப்பனையாய் இருக்கிறது.

மத்தேயு 17: 22  படி அவர்கள் தன்னை  மறைத்துகொள்வார்கள் , they have courage to hide them self
லுக்கா 5 : 5
வலைகளைபோட்டர்கள் மீன்களோ சிக்கவில்லை , ஆனால் வலைகள் மட்டும் கடலில் இருந்த  பாறைகளில் மாட்டிக்கிழிந்துவிட்டன.
நாம் கூட இப்படி பட்ட மக்களை சந்தித்து இருக்ககூடும் . இவர்கள் தோற்றுபோனவர்கள் . ஒருவேளை பெரிய ஊழியக்காரர் சற்று  சறுக்கினால் அவரை கவனிக்க , தேற்ற, சிலர் வரலாம் , ஆனால் என்ன தான் பிரயசப்பட்டாலும் ஒன்றும் இல்லாத ஊழியங்களை, ஊழியகரர்களை யார் தாங்குவார் , யார் தேற்றுவார் .-  பழுதுப்பர்க்கவேண்டும்
கலாத்தியர் 6 : 1   ஒருவன் யாதொரு  குற்றத்தில் அகப்பட்டால் ,ஆவிக்குரியவர்களாகிய  நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் ...  
 இங்கே குற்றம் செய்து அகப்பட்டவன் என்று சொல்லி இருக்கிறது .
அப்படியானால்  நாம் யார்  ? . குற்றம் செய்து அகப்படாதவர்கள் .
கர்த்தர் நம்மை காட்டிக்கொடுக்கவில்லை .
யாராவது குற்றம் செய்தா போதும் வசனம் சொல்லியே அவர்களை மிதிப்பது நம் பழக்கமாகிவிட்டது,,,,
வசனம் என்ன சொல்லுகிறது ............ஆவிக்குரியவர்களாகிய  நீங்கள் சாந்த்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பண்ணுங்கள் .
சீர்பொருந்த பண்ணுவது - பழுதுப்பார்பது 

கர்த்தர் தாமே இந்த பழுதுப்பார்க்கும் கனமான ஊழியத்திற்கு நம்மை  ஆயத்தப்படுத்துவராக

Friday, December 3, 2010

சொல்லத்துடிக்குது மனசு ...

முதலில் நான் எனது தலைப்பைப்பற்றி சொல்லவேண்டும். இதற்கு உடையும் உறவுகள் உணர்வற்ற மனிதர்கள் என்ற வாக்கியத்தை தலைப்பாக வைக்கலாம் என்று யோசித்தேன், ஆனால் இதை  எதிர்மறையான தலைப்பாகவே எல்லோரும் கருத வாய்ப்புகள் அதிகம் . எனவே என் மனதில் உள்ள ஆதங்கத்தயும்,  நான் சந்தித்த சில நிகழ்வுகளை சொல்ல விரும்பியதால், இந்த சொல்லத்துடிக்குது மனசு என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தேன்...

எனக்கு குறிப்பிடட்ட சிலரே நண்பர்களாக உள்ளனர், காரணம் பல உண்டு. சில காரணங்களை சொல்லுகிறேன்,தவறாக நினைக்கவேண்டாம், இது என்னுடைய கருத்துமட்டுமே. எனக்கு எந்த கெட்ட  பழக்கமும் இல்லை, நான் என்னை பெருமைப்படுத்துவதர்க்காக சொல்லவில்லை, என் பெற்றோர் என்னை அப்படி வளர்த்தார்கள், எனக்கும் ஏதாவது பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை, நிச்சயமாக என் பெற்றோருக்கு நான் நன்றி சொல்லத்தான் வேண்டும். கெட்டபழக்கத்துக்கும் FRIENDSHIP  'க்கும் என்ன சம்பதம் என்று தானே யோசனை!. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட  நண்பர்களை தெரிந்துகொள்கிறார்கள். உங்களுக்கு எந்த பழக்கமும் இல்லை என்றால் தானாகவே உங்கள் நண்பர்களின்  வட்டம் சிறியதாகிவிடும். இது நிதர்சனமான உண்மை.  தோழர்கள் எவ்வளவோ பரவாஇல்லை, ஆனால் தோழிகளோ சொல்லவே தேவையில்லை. உங்களில் பலப்பேர் இதை ஒத்துக் கொள்ளக்கூடும்.எனக்கு சில  நல்ல தோழிகளும்  உண்டு , அவர்கள் திருமணதிற்கு பிறகும் கூட அவர்கள் கணவர்களும் நல்ல நட்பை ஆதரிக்கிறார்கள், இது வரவேற்க்கதக்க ஒன்று.

சரி 2  சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன், 2 ம் தோழிகளை பற்றியதே, ஏன் நான் தோழிகளை பற்றி சொல்கிறேன் என்றால் அவர்களுடைய செயல்கள் அதிகமாக என்னை பாதித்தது.

முதல் தோழியோ என்னிடம் எல்லவற்றையும் பகிர்ந்துக்கொள்வாள்,சுகங்கள், துக்கங்கள், ஆலோசனை,எல்லவற்றையும் தான், காலபோக்கில் அவளுக்கு  காதல் மலர்ந்தது, அவளுடன் கூட வேலை செய்பவர் அவர். சிறிது நாள் கழித்து என்னிடம் பேசிய என் தோழியோ சில விஷயங்களை அவரின் காதலரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னாள் ஏனென்றால்  நான் முடிந்தவரை உண்மை பேசுவேன் என்பது அவளுக்கு தெரியும், எனவே சில விஷயங்கள் அவருக்கு தெரியவேண்டாம் என்று  சொன்னாள். நான் அவளிடம்,  நானாக எதையும் சொல்லமாட்டேன் ஆனால் அவர் கேட்டால் நான் உண்மையை  சொல்வேன் என்றேன், அவ்வளவு தான்,  அவள் அவளது தொடர்பையே துண்டித்துக் கொண்டாள்,  என்ன இது உண்மை பேசினால் என்ன தவறு.

அடுத்த தோழி சற்று வித்தியாசமானவள், என் நண்பன் என் வாழ்க்கைக்கு அவள் ஏற்றவள் என்று என்னை அவளுக்கு அறிமுகம் செய்தான், அவளும் என்னிடம்  தொடர்பு கொண்டு பேசினாள்.நானும் பேசினேன், அவளும் வேதத்திலே அதிக நாட்டமுடையவளாகவே  இருந்தாள். நான்  அதிகமாக நான் எப்படி தேவனிடம் பற்றுக்கொண்டேன் என்பதையும் , தேவன் என்னிடம் எப்படி இடைப்பட்டார் என்பதையும் பேசுவேன். அவளும் அப்படியே அவளுடைய கேள்விகளையும், தேவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவு , ஞாயிறு செய்தி எல்லவற்றையும் பேசுவோம். திருமணத்தை  பற்றியும் பேசினோம் , அவளுக்கு என்னை பிடித்திருகிறது என்று சொன்னாள், நேரம் வரும்போது அவள் தகப்பனிடம் வந்து பேசவேண்டும் என்றும் சொன்னாள்.ஒருமுறை என்னிடம் அவள் இப்படி கேட்டாள் : சண்டை வந்தால் நீங்கள் பேசுவீர்களா ? நான் சொன்னேன் நான் சண்டை போட்டுக்கொண்டாவது பேசுவேன் என்றேன்,எனக்கும் அதுதான் வேண்டும் என்றாள் அவள் , பேசாமல் மட்டும் இருந்துவிடதிர்கள் என்றும் சொன்னாள்...., இப்படியாக  50 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பேசினோம்.  அன்று செப்டம்பர் 27 . ஒரு சிறு சண்டை (புரிந்துக்கொள்ளளுக்கான முதல் படி என்று கூட சொல்லலாம் ), அவ்வளவு  தான் அத்துடன் அவள் என்னிடம் பேசவில்லை, நான் call பண்ணினாலும் எடுப்பதில்லை, இப்படியே ஒரு வரம் கழிந்தது. என் நண்பனிடம் சொல்லி காரணம் கேட்டேன் குளத்தில் போட்ட கல் போல  பதில் ஏதும் இல்லை இதுவரை. அவள் என்னிடம் சொல்லியவற்றை அவள்செய்யவில்லை, ஒரே ஒரு சொல்லை தவிர, அதுதான் அவள் சொன்னது:  நான் ஒருமுறை முடிவு செய்தால் யார் என்ன சொன்னாலும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன், முடிவு எடுத்ததால் எடுத்ததுதான் என்றாள் .அவள் காப்பாற்றிய அவளது வார்த்தை இதுதான்.நான் என்னுடைய கோணத்திலிருந்து எனக்கு தெரிந்தவற்றை  மட்டுமே இங்கு சொல்லுகிறேன். ஏன் நான் இதை சொல்லவேண்டும், எல்லா உறவுகளிலும் சண்டைகள் வரும்,சண்டையே வராது  என்று யாராலும் சொல்ல முடியாது, ஆனால் பிறகு பேசி சரிசெய்துக்கொள்ள வேண்டும்.
அங்கு மனசாட்சிக்கு இடம்கொடுக்க வேண்டும்,  மனது எடுக்கும் முடிவுக்கு அல்ல.
நான் அவளை வாரத்தில் மூன்று முறையாவது பார்பதுஉண்டு ஆனாலும் அவளோ என்னை யார் என்றே தெரியாதவர் போல , எதுவுமே நடக்காதது போலவே நடந்துக்கொள்கிறாள், இது ஒவ்வொருமுறையும் அவளது மனசாட்சியை (conscious) நசுக்கிவிட்டு அவளது decision' கே முக்கியத்துவம் தருவதாக எனக்கு தெரிகிறது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும்  மனசாட்சிக்கு  இடம் கொடுக்காமல் போனால், தவறு செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும் ... இது மிகவும் வருந்தக் கூடிய ஒன்று .

இதன் மூலம் நான் என்ன  கற்றுக்கொண்டேன் ? மீண்டும் என் வாழ்வில் மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.மீண்டும் மீண்டும் மன்னிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் இந்த சம்பவம்  ஞாபகம் வரும்போது கோவம் தலையெடுக்கும், ஆனால் மன்னிக்கவேண்டும் என்று மன்னித்துவிடுவேன், எவ்வளவு முறை ஒருவரை மன்னிக்க வேண்டும் ஏழு எழுபது முறை ,,,,,7 * 70  இப்படியா,இல்லை  இல்லவே இல்லை ,77777777777777777 .... இப்படி எழுபது 7 . இப்படியானால் மன்னிக்க எத்தனைமுறை. கணக்கே இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் அளக்கிற அளவின்ப்படியே உங்களுக்கும் அளக்கப்படும் என்ற வேத வசனத்தின் படி மன்னித்து தேவனிடத்தில் நாம் மன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.
பிரிந்துப்போகிறவன் தன் இஷ்ட்டப்படி செயயப்பார்க்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. 
commitment இல்லாத relationship ' யையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
orkut , facebook போன்ற network site களில் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள், இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் hi bye relationship 'யைத்தான் விரும்புகிறார்கள், அரவணைப்பை அல்ல.

பிரிந்து சொல்லவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஒரு காரணமும் தேவையில்லை,ஆனால் சேரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் 1000 காரணங்கள் இருந்தாலும் சேரலாம், மனது தான் வேண்டும்.where there is a will there is a way, where there is no will there is no way .  எத்தனையோ பேர் உண்மையான அன்பால் திருந்தி வாழ்கிறார்கள்,நம்மில் ஒவ்வொருவரும் ஒரு உதாரணத்தை சொல்லமுடியும். 
எந்த உறவாய் இருந்தாலும் , நட்பு , காதல், திருமணம் , குடும்ப உறவு எதுவாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்போம், மன்னிப்போம்,பேசி சரிசெய்துக்கொள்வோம்.
நான் இறந்த காலத்தையும், வரும் காலத்தையும் சரியாக சொன்னாலும், நான் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் நான் ஓசை இடுகிற வெண்கலத்தைப்போலவும் சத்தமிடுகிற கைத்தாளத்தைபோலவும் இருப்பேன் என்று வேதம் சொல்லுகிறது 
  இந்த படத்தை பார்ப்போம் , அன்பு ஒருக்காட்டு மிருகத்தை எப்படி மாற்றியிருக்கிறது என்று இதை பார்த்தால் புரியும்.



உறவுகளில் உண்மையாக இருப்போம். உண்மை முள்ளாக குத்துவது போலதான் இருக்கும், ஆனால் அது மருந்து போல எல்லவற்றையும் சரிசெய்துவிடும் . உண்மைக்கு எந்த சாயமும் தேவையில்லை. உண்மை பலாச்சுளை போல , அதை சுற்றிலும் முள் இருந்தாலும் உண்மை  இனிக்கும். அப்படியானால் உணமையான  உறவு எப்படி இருக்கும் என்று பாருங்கள், அது தேனில் இட்ட பலாச்சுளை போல இனிக்கும்.


உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்...

Tuesday, November 30, 2010

உற்று கேட்கும் தேவன்- உடனடி பதில்

       அன்று ஆகஸ்ட் 13 காலை சுமார் 8 மணி இருக்கும், எனது தோழியிடம் கேள்வியின் நாயகனான எனக்கு இருந்த பல கேள்விகளில்  ஒரு கேள்வியை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அந்த கேள்வி இது தான், ஏன் ஆண்டவர் நம்மை அதிகமாக ஆசிர்வதிக்கவில்லை , நாம் ஏன் இவ்வாறாக நடுத்தர மக்களாகவே இருக்கிறோம்?   நான் இவ்வாறு கேட்பதற்கு காரணம் உண்டு. எல்லாரும் இவ்வாறாகத் தான் கேள்விகளை கேட்பார்களா என்று எனக்கு தெரியாது ,,, ஆனால் நான் இப்படியாகத்தான் யோசிப்பேன்.  வேதத்திலே தேவன்,  ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இன்னும் பலரை அதிகமாக ஆசிர்வதித்தார் , 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்கு என்று ஆசிர்வாதங்களின் மடங்கு அல்லது அறுவடையின் பலன்கள் உண்டு , இதை நான் கோடிட்டு, மட்டுமல்லாமல் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே வேதனையைக்கூட்டார் என்ற நீதிமொழிகளில் உள்ள வசனத்தையும் காரணமாக வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன்.
       என்னுடைய இந்த சந்தேகத்தை முதலாவது ஒரு போதகரிடம் கேட்டேன், அவர் : அது பழைய ஏற்பாடு காலம், புதிய ஏற்பாட்டிலே ஆசிர்வதங்களின் அடிப்படை பணம் அல்ல என்று சொன்னார், எனக்கு இந்த பதில் ஏற்புடையதாக இல்லை,என் மனமும் இதை ஒத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐசுவரியத்தை தரும் .என்று சொல்லி அது எந்த ஆசிர்வதமாய் இருந்தாலும் அது ஐஸ்வரியத்தில் தான் முடியும் என்றும் சொன்னேன். ஒரு சில தினங்களில் என்னுடைய சபை போதகரை  சில காரியங்களுக்காக சந்தித்தேன் அப்போது நான் இந்த கேள்வியை அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் ; தேவன் என்னை அவ்வாறாக தான் ஆசிவதிக்கிறார் என்று சொன்னார் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது அவரைப்பார்க்க சிலர் வந்ததினால் என்னிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் சென்றுவிட்டார் ,எனக்கோ என்னுள் திருப்தியே இல்லை, அடுத்தநாள் என் மூத்த சகோதரியின் திருமணம் எனவே எனக்கு யோசிக்க நேரம் இல்லை , ஆனால் அடுத்த நாள் ஆகஸ்ட் 13 எனது தோழியிடம் இதை பற்றி பேசினேன் , ஏன் தேவன் நம்மை 30 மடங்கு , 60 மடங்கு,100 மடங்குஆசிர்வதிக்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு ஒரு வசனம் என் கண்ணில் பட்டது  அது,  நீங்கள்  இப்பொது இருக்கிறதை பார்க்கிலும் கர்த்தர்  உங்களை ஆயிரம் மடங்கு ஆசிர்வதிப்பார் என்பது (உபாகமம் 1 : 11 ) , எத்தனையோ முறை நான் அந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன் ஆனால் அந்த வசனம் என் கண்ணில் பட்டதே இல்லை, இதை என்னால் நம்பவே முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியாது ,ஏனென்றால் நான் பல முறை அதே இடத்தில அமர்ந்து பேசி இருக்கிறேன் அந்த வசனமும் அங்கே தான் இருந்தது ,ஆனால் அந்த நேரத்தில் , அந்த TOPIC 'ஐ பேசும்போதுத்தான் அது என் கண்ணில்பட்டது.
       நான் வெறும் 30 ,60 ,100  மடங்கு ஆசிர்வததிலே என் தேவனை மட்டுப்படுத்திவிட்டேன் ஆனால் தேவனோ இரக்கமும் உருக்கமும் நிறைந்தவர், அவர் எல்லாவற்றிலும் எல்லைகளற்றவர்   என்பதை  புரிந்துக்கொண்டேன்.
      வேதத்தில் ஒரு வசனம் உண்டு கர்த்தருக்கு பயந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்,கர்த்தர் உற்று கவனிப்பார் என்று ... அதை முதல் முறையாக அனுபவித்தேன் ....


      உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் -  prithiviraj23@gmail.com

Sunday, November 28, 2010

அற்பமான ஆரம்பம் ஆச்சரியமான முடிவு - எழுப்புதல்

இன்று ஞாயிற்றுக் கிழமை, இதோ தேவ செய்தி,
போதகர் : கடந்த வாரத்தில் ஒரு சாட்சியை கேட்டேன், ஒரு சிறுவன் இறந்து விட்டான் ,  போதகர் அந்த சிறுவனிடம் வந்து இறந்துப்போன அவனுடைய கையை பிடித்துக்கொண்டிருக்கிறார், சற்று நேரம் கழித்து அந்த கைகளிலே அசைவு, சிறுவன் பிழைத்துக்கொண்டான், அந்த போதகர் ஒன்றும் செய்யவில்லை, ஜெபிக்கவில்லை , ஆண்டவரே இந்த சிறுவனுக்கு இறங்கும் என்று அழவில்லை, ஆனால் காரியம் நடந்ததம்மா ...அந்த ஒரு contact  தான், இப்படி ஒரு contact தேவனிடம்  நமக்கு இருந்தால் போதும்  யாரும் நம்மை ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ உந்தித்தள்ளவேண்டிய அவசியம் இருக்காது, அந்த விதமான  ஆராதனையே வித்தியாசமானதாய்  இருக்கும்.
       நாம் தள்ளு வண்டியாய் இராமல் ,engine ஆக இருக்கவண்டும். தள்ளு வண்டி யாராவது தள்ளினால்த்தான் போகும், ஆனால்  engine மற்றவற்றை இழுத்துச்செல்லும்.
இந்தவருட தொடக்கத்தில் இருந்து நாம் எழுப்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருகிறோம். ஆனால் தொடங்கிய இடத்திலேயேத்தான் இன்னும் இருக்கிறோம். இதைக்குறித்து தேவன் எனக்கு உணர்த்தின காரியத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
      
        எந்த ஒரு நல்லக்கரியத்தின் தொடக்கமும்  தெய்வத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

ஆதியாகமம் 1 : 26  பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாகுவோமாக ; ....
தேவன் தாமாகவே இந்த முடிவை எடுக்கிறார், இந்த முடிவு எடுப்பதற்கு யாரும் அவரிடம் சொல்லவில்லை, எந்த காரியங்களும் தேவனை தூண்டவில்லை, தேவன் உலகத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார், அவர் தமது சாயலாகவே படைத்ததினால் மனிதனுக்கும் சுயமாகவே எதையும் ஆரம்பிக்க கூடிய ,அல்லது தொடங்கக்கூடிய தன்மை இருக்கிறது . இது தேவனுடைய சுபாவமாய் இருக்கிறது.

ரூத் 2 : 2  மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப்  பார்த்து : நான் வயல்வேளிக்குப் போய், யாருடைய கண்களில் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்  கொண்டுவருகிறேன் என்றாள் ; .........
முதல்  அதிகாரத்தை படித்தால்  ரூத் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறாள் என்று புரியவரும் ,
      மோவாபிய ஸ்திரீ என்று கூறப்பட்டிருக்கிறது, மோவாபிய சந்ததி சபிக்கப்பட்ட சந்ததி, இந்த சபிக்கப்பட்ட ஒரு சந்ததியில் இருந்து வந்தவள்தான்  இந்த ரூத்.
ரூத் ஒரு விதவை ,தன் இளவயதின் வாழ்க்கையை ,சந்தோஷத்தை இழந்த நிலைமை, அதுமட்டுமல்ல தன் எதிர்க்கால நம்பிக்கை அற்றுப்போன நிலைமை என்று பார்க்கிறோம், இந்த சூழ்நிலையில் ரூத் என்பவள் ; நான் போய் என்று ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறாள்,
இது ஒரு நற்க்கிரியையாய் இருக்கிறது, பிறகு சபிக்கப்பட்ட சந்ததியில் வந்த ரூத் ஒரு ஆசிர்வாததின் வாய்க்காலாக ஆசிர்வாததின் சந்ததியை பெற்றவளாக மாறினாள்.

1 சாமுவேல் 14 : 1  ஒருநாள்  சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை  நோக்கி : நமக்கு எதிராக அந்தப்பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்க்குப்போவோம் வா என்று சொன்னான் ; ....
இந்த சூழ்நிலை  முந்தைய அதிகாரங்களை படித்தால் தெளிவாக புரியும் , தன் தகப்பன் தவறு செய்து ரஜ்ஜியபாரத்தை இழந்துவிட்டான், இஸ்ரவேல் மக்களும் பயந்து சிதறி ஓடிபோனார்கள், இவனிடம் இருபவர்களோ 600 பேர் மட்டுமே, அவர்களும் பயந்து கொண்டிருக்கிறார்கள், இவனுடைய ஆயுததாரியிடமோ  ஆயுதங்களே  இல்லை, ஏனென்றால் இஸ்ரவேலிலே ஆயுதங்கள் செய்ய கொல்லர்களும் இல்லை, யோனதானிடமும் , அவன் தகபனிடமும் மட்டுமே பட்டயம் இருக்கிறது,  கடலத்தனையாய் எதிரிகள் சூழ்ந்து இருக்கிறார்கள், என்ன செய்வது, அந்த நேரத்தில் தன் ஆயுததாரியை நோக்கி,
9 வது வசனம்:  அந்த தாணையத்திற்க்குப்போவோம் வா , ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும் , கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை என்றான். ஒரு சின்ன ஆரம்பம்தான், முடிவு  கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஜெயத்தை கட்டளையிட்டார்.

1 சாமுவேல் 17 : 26  அப்பொழுது தாவிது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து ,இந்த பெலிஸ்தனை கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும் ; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
தன் சகோதரருக்கு பால் கட்டிகளை கொண்டுவந்தவன்,தன் சகோதரருடைய நலத்தை விசாரிக்க வந்தவன்த்தான் இந்த தாவீது,ஆனால் அந்த சூழ்நிலையை பார்த்து அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை , அங்கே ஆரம்பித்துவிட்டான்,யாரையும் அவன் எதிர்பார்க்கவில்லை,தேவன் அவனுக்கு உதவினார்,ஒரே கல்லால்  கோலியாத்தை கொன்றான்,சத்துருவை வென்றான்,அவன் உயிரோடு இருந்த நாளெலாம் தோல்வியையே சந்திக்கவில்லை 

 நெகேமியா 2 : 3 ராஜாவை நோக்கி :ராஜா என்றைக்கும் வாழ்க ;என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பழானதும் ,அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்க முகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன் .
தன் சொந்தப்பட்டினம் இடிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் மகா வேதனை அடைந்து  தன் இதயத்தினுள் அடக்க முடியாதபடி முகம் வாடி இருந்தான், ராஜா இதை பார்த்து என்ன காரியம், ஏன் முகம் வாடி இருக்கிறது என்று கேட்டவுடன் நிலைமையை சொல்லி , எருசலேமை கட்டப்பட  வேண்டும் ராஜாவிடம் சொல்ல ராஜாவும் அனுமதி கொடுக்கிறார் ,எருசலேமை கட்ட ஆரம்பிக்கிறான் , எவ்வளவோ பிரச்சனை வந்தபோதும் தொடர்ந்து கட்டி முடிக்கிறான் .
2 இராஜாக்கள் 7 : 3 , 9   (படிக்க) , நான்கு குஷ்ட்டரோகிகள் தன்னுடைய நாட்டு மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஒரு காரியத்தை தொடங்கினார்கள்.
அவர்களுடைய நோய் அவர்களை கண்டிப்பாக தடுத்து இருக்கும் . ஏனெனில் குஷ்ட்டரோகம் உள்ளவர்கள் ஊர் எல்லைக்குள்ளே வரவே கூடாது என அந்த நாட்டின் கட்டளை, அப்படி வந்தால் தீட்டு , தீட்டு என்று கத்திகொண்டுத்தான் வரவேண்டும் ,யாரும் தொட மாட்டார்கள்,யாரும் அருகே வரவும் மாட்டார்கள், அதே நாட்டு மக்கள் தான் அவர்களை ஊரை விட்டு வெளியேற செய்தவர்கள், ஆனால் அந்த நாட்டு மக்களுக்காக அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள்,ஏனெனில்  அந்த நாட்களில் கொடிய பஞ்சம் இருந்தது, எந்த அளவுக்கு பஞ்சம் என்றால் தன் மகனையே சமைத்து சாப்பிடும் அளவுக்கு பஞ்சம் கொடியதாய் இருந்தது , அந்த குஷ்ட்டரோகிகள் தொடங்கிய காரியத்தால் நாட்டு மக்களுக்கு நன்மை.

அடுத்த உதாரணமாய்  ஏன்  நீங்கள்  இருக்க கூடாது ?
எதாவது ஒரு காரியத்தை தேவனுக்காக  நீங்கள் ஏன் தொடங்க கூடாது ?

ரூத் , யோனத்தான் , தாவீது ,நெகேமியா  இவர்களுகெல்லாம் சூழ்நிலைகள்  சாதகமாக இல்லை , சாதகமான சூழ்நிலைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை, மற்றவர்களுக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.மறவர்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை, அவர்கள் தொடங்கினார்கள் . எழுப்புதலை பெற்றுக்கொண்டார்கள் , 
    
எதற்காக உங்கள் காத்திருக்குதல் ? மற்றவர்கள் துணைக்கு வேண்டுமா ? மற்றவர்கள் உங்களை தூண்ட வேண்டுமா ?
அல்லது நாம் மற்றவர்களை தூண்டுவோமா ?
அல்லது தேவனுடைய வார்த்தை உறுதி பட காத்து காலத்தை கடத்துகிறோமா ?

உங்கள் ஆரம்பத்தை யாரும் கண்டுக் கொள்ளாமல் இருக்கலாம் , ஆனால் எழுப்புதல் நிச்சயம்.      எதை தொடங்கவேண்டும் ?  தேவனிடம் கேளுங்கள்
அற்பமான ஆரம்பத்தை அசட்டை செய்யாதே ... என்று வேதம் சொல்லுகிறது
 DO THE BEST GOD WILL DO THE REST என்று நாம்  கேள்விப்பட்டு இருப்போம்.

உங்களில் நற்கிரியையை  தொடங்கினவர் தேவன்  ...
தேவன் ஏற்கனவே நற்கிரியையை தொடங்கி இருக்க , நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ...  
            
             இது சிந்திக்கும் காலம்மட்டுமல்ல , செயல்படும் நேரமும் இது தான்,  
                                             மௌனமாய் இருக்காதே ...

Wednesday, November 24, 2010

மனிதனின் மறுபக்கம் - cricket .

இப்பொதுத்தான் test match முடிந்தது, இந்திய அணி  வெற்றிப் பெற்றது . நாம் ஆவலுடன் எதிர்பார்த்த டெண்டுல்கர் 50 th century' ஐ தொட இன்னும் ஒரு match காக்க வேண்டும் .
cricket  ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ  cricket  ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....





 

நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் !!!

       சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான், எனது சபை மூப்பரும் , என் குடும்ப நண்பருமான திரு .சுந்தர் ராஜன் அண்ணன்  வீட்டிற்க்கு சென்றேன் ,  நேரம் கிடைக்கும்போது நான் அங்கு செல்வது வழக்கம், பொதுவாக நாங்கள் எல்லா TOPIC'ஐயும் பேசுவோம் . அண்ணன் பொதுவாக பேசுவார் .குறிப்பாக, நாட்டு நிலைமை முதல் ரோட்டு நிலைமை வரை தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ளவார், ஏனென்றால் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு என்பது அவருக்கு தெரியும். திருமதி சுந்தர் ராஜன்  (நான் அவர்களை அண்ணன் , அக்கா என்று அழைப்பேன் ) அவர்கள் நன்றாக காரியங்களை புரிந்து கொண்டு விளக்ககூடியவர், நான் அவர்களிடம் என்னுடைய கேள்விகள், எனக்கு அறிவுரைகள் ,...பொதுவாக என் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்வேன், ஏனென்றால் சிலநேரங்களில் நான் தவறு செய்திருக்க கூடும், எனவே மறைக்காமல் சொல்லி அறிவுரைகளை கேட்டுக்கொள்வேன், எங்களுடைய 70 % பேச்சு, வேதத்தை  பற்றி , தேவனைப்பற்றியதாக இருக்கும்.
           ஒருமுறை நான் என்னை சுற்றி நடந்த விஷயங்களால் சற்று பாதிக்கப்பட்டு அக்காவிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன், ஏன் இப்படி நடந்துக்  கொள்கிறார்கள், கடவுள் இவர்களை கேட்கமாட்டாரா, இப்படி மாற்றவர்கள் மேல் இருந்த கோபத்தை கடவுள் பக்கமாக திருப்பிவிட்டேன்,கடவுள் ஏன் இப்படி இருக்கிறார், கடவுள் சில விஷயங்களை உடனே செய்தால், தானே எலோருக்கும் பயம் வரும், என்று புலம்பினேன் , ஆனால் எனக்கு ஒன்று தெரியாமல் போய்விட்டது அந்த உரையாடலில் நங்கள் மட்டுமல்ல கடவுளும் இருந்தார் என்பது, அக்காவும் நான் சொன்னதுபோலவே சொல்லி, பிறகு  "நா ஒரு book'அ  படிச்சேன்,அதுல ஒரு வசனம்  இருக்குப் பாரு"  என்று  சொல்லி வேதத்தில் இருந்து அந்த வசனத்தை எடுக்க வேதத்தை புரட்டினார்கள். அதே சமயம்  " நானும் ஒரு அதிகாரத்த  படிச்சேன் அக்கா, நல்லா இருக்கு"ன்னு சொல்லி அந்த அதிகாரத்தை எடுத்தேன், அது ரோமர் 12  .

      நான் அந்த அதிகாரத்தை படிக்க காரணம் இருக்கிறது, அதை நான் பிறகு சொல்லுகிறேன்.
       அந்த வாரத்தில் மட்டும் நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை பலமுறை படித்து இருந்தேன்.  11 ம் அதிகாரத்தில் உள்ள கடைசி வசனத்தையும் படித்தேன்,  ஆனால் அதற்கு மேல் உள்ள வசனத்தை நான் பார்க்கவில்லை. அன்று  நான் ரோமர் 12 ம் அதிகாரத்தை எடுத்தவுடன் என் கண்ணில் பட்ட வசனமும் ,அக்கா எடுத்த வசனமும் ஒரே அர்த்தத்தை சொல்லிற்று, ஆனால் அக்கா எடுத்த நிருபமும் அதிகாரமும் வேறு ...அந்த 2 வசனத்தையும் பார்ப்போம்.
      ரோமர் 11:34 :  கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? அவருக்கு ஆலோசனைக்காரனாய் இருந்தவன் யார் ?
35 :தனக்கு பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார் ?

        அக்கா எடுத்த வசனம் :    1 கொரிந்தியர் 2 : 16  : கர்த்தருக்கு போதிக்கதக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார் ? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது ...
இதை படித்தப் பிறகு நாங்கள் தேவனும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டார் என்று உணர்ந்தோம் .
       அந்த உணர்வு எப்படி இருந்தது என்றால் " நீ யாருடா மகனே, என்னை கேள்வி கேட்க ? என்று கேட்டதுப்போல் இருந்தது, ஒருபக்கம் கேள்விக்கு பதில் கிடைத்தது என்ற சந்தோஷம்,  மறுபக்கம் 2 வது முறையாக  நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் !!!.  

Monday, November 22, 2010

புதிய மனிதா ....பூமிக்கு வா ...

 புதிய மனிதா ....பூமிக்கு வா ..... என்ற பாடலை நேற்று காலை எனது நண்பனை cell phone'ல்  அழைத்தபோது  நான் கேட்டேன் ,அவருடைய caller tune அதுவாக இருந்தது , என்னுடைய நோக்கம் அவரை சபைக்கு போக சொல்லுவது . ஏன் நான் அவரை அவ்வாறு சொல்ல வேண்டும். ஏனென்றால் என்னை ஒருவர் இவ்வாறாக வருந்தி அழைத்ததால்  நான் சபைக்கு சென்றேன்,என் கேள்விகளுக்கு  பதிலை பெற்றுக்கொண்டேன்.அதை  பின் வரும் நாட்களில் விவரிக்கிறேன் . சரி ,
உண்மையாக  புதிய மனிதன் இருக்கிறானா , எங்கு இருக்கிறான் ?  
வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் ...

2 கொரிந்தியர் 5 : 17 - இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் ; பழையவைகள் ஒழிந்துபோயின .எல்லாம் புதிதாயின ...
    இது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்...அதே அதிகாரத்தில் 21 வது  வசனம் - நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி , பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் . என்று பார்க்கிறோம் ... நமக்காக அவரே பலியானார் என்று வேதம் சொலுகிறது. ஏன் அவர் நமக்காக பலியானார்? அருமையானவர்களே மனிதன் பாவம் செய்து தேவனிடம் இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டான்.  வேதம் சொல்லுகிறது நம்முடைய பாவமே நமக்கும் தேவனுக்கும் நடுவே பிரிவினை சுவராய் இருக்கிறது,  பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம்  தெளிவாக கூறுகிறது.
இதற்கு வேறு வழி இல்லையா? நான் மரித்தால்தான் விமோசனமா ?
வழி இருக்கிறது அன்பானவர்களே ...!   குற்றமில்லாத ஒருவர் நமக்காக மரிக்க வேண்டும், இந்த பூமியிலே குற்றமில்லாமல் யார் இருக்கமுடியும், விலங்குகளை பலி இடலாமா ? ஆனால் விலங்கிற்கு குற்றம் என்றால் என்னவென்றே தெரியாது. இப்படியானால் எனக்காக யார் மரிப்பார். இதற்க்க்காகதான் இயேசு உலகத்தில் மனிதனாய் பிறந்து 100 % மனிதனாய் வாழ்ந்து குற்றமில்லாமல், பாவமில்லாமல் நமக்காக சிலுவையில் பலியானார், எனக்காக, என் பாவத்திற்காக இயேசு மரித்தார்  இதை நம்பினால் போதும், நாம் கிறிஸ்துவை நம் உள்ளத்துக்குள் வர அனுமதிக்கிறோம். அதுமட்டும் போதாது அவர் நம் உள்ளத்திற்குள் வந்துவிட்டால், அவருடைய சுபாவங்களை  நாம் பிரதிபலிபோம். அவர் நம்மிலே, நாம் அவரிலே நிலைத்து இருந்தால் நிச்சயமாக நாம் நம்முடைய  பழைய சுபாவங்களை  விட்டு புதிய மனிதனாய் இருப்போம் .இயேசு: நானே  வழியும்,சத்தியமும் ,ஜீவனுமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்.

அடுத்து ரோமர் 12 : 2  நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக ,உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் .

இந்த அதிகாரத்தை நீங்கள்  படித்தால்  மனம் மறுரூபமாக என்ன செய்யவேண்டும் என்று தெரியும் ...  டியுங்கள் , பயிற்சி செய்யுங்கள், புதிய மனிதனை பூமிக்கு வர விடுங்கள். உங்கள் எண்ணங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள் ....prithiviraj23@gmail .com மூலமாக  ...

திருஷ்டாந்தங்கள்

இன்று ஞாயிறு .... காலை வேலை , ஆம் , சபை கூடி வரும் நேரம் ...
கர்த்தருடைய சபைக்கு சென்றேன் , செய்தியை  கேட்டேன் , இதோ செய்தி சுருக்கம் ...
போதகர் : விட்டு கொடுப்பவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்காமல் தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள் ,
... என் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் சரியாக இயங்கவில்லை , கம்ப்யூட்டர் சரி செய்ய service engineer'ம் வந்தார் ,கம்ப்யூட்டர் 'ஐ  பார்த்துவிட்டு அவர் கேட்டார் உங்கள் CD-DRIVE வேலை செய்யுமா ? என்று ...CD-DRIVE வேலை செய்தால் உங்கள் கம்ப்யூட்டர்'ஐ நான் சரி செய்துவிடுவேன் என்றார் ... ஆனால் CD -DRIVE வேலை செய்யவில்லை , வேறே CD-DRIVE'ஐ  மாற்றிய பிறகு கம்ப்யூட்டர் 'ஐ சரி செய்தார் ... இப்படித்தான் நாமும் கூட இருக்கிறோம் ...இது நம்மை போலத்தான் , நம் வாழ்க்கயை காண்பிக்கிறதாய்  இருக்கிறது , தேவனோடு  POINT OF CONTACT இல்லாதவர்களாய் நாம் இருக்கிறோம் ..மிக நன்றாக நாம் தேவனுக்குள்ளாக இருப்போம் ஆனால் ஒரு சின்ன சோதனை வந்தால் சிக்கிவிடுவோம் , சபையிலே நாற்காலி காலியாக இருக்கும் ,மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் . RE-BOOT (OR ) RE-INSTALL செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது ..!
எப்படி ஒரு CD-DRIVE வேலை செய்யாமல் இருந்ததால் கம்ப்யூட்டர்'ஐ சரி செய்ய முடியவிலையோ அப்படியே நாமும் கூட  நம்மை  விட்டுக்கொடுக்காமல், சில காரியங்களை  மாற்றிக்கொள்ளாமல், தேவனை நம்மிடம் கிரியை செய்யாமல் தடுக்கிறவர்களாய் இருக்கிறோம் ,,,  எப்படி இது உண்மை தானா ... ?   தேவனை நான் தடுக்க முடியுமா ?  அருமையானவர்களே முடியும் (சங்கீதம் 78 : 42 ).  ஆம் உலகம் கொள்ளக்கூடாத பெரிய தேவனை மட்டுப்படுத்த இந்த களிமண்ணலே முடியும் என்பதுத்தான் உண்மை ...எத்தனை கொடுமை ஐயா  இது ...
கடல் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அது கடக்க கூடாதபடி எல்லையை குறித்தவர் அவர் அல்லவா...
எரேமியா 5 : 22 . கடல் எவ்வளவு பெரியது , எவ்வளவு பெரிய பெரிய அலைகள் வந்தாலும் அதை தடுப்பது எது தெரியுமா ... சிறு மணல்... ஆற்று மணல்  கடல் மணலைவிட சற்று பெரியது  ... அலையை தடுப்பது பெரிய கல்லோ அல்லது,  பெரிய சுவரோ அல்ல ..சிறு மணல்.
நம்மிடம் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட உலகம் கொள்ளக்கூடாத தேவனை நம்மிடம் செயலிழக்க செய்துவிடும்  , எத்தனை பரிதாபம் ... நாம் சாத்தானை அல்லவா செயல்பட அனுமதிக்கிறோம் ...

தானியேல் 3 வேளையும்  தவறாமல் ஜெபித்தான் , சட்டம் மாறியது , மீறினால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் ... ஆண்டவருக்காக மிறினான்,  ராஜாவை ஆண்டவருக்காக மாற்றிவிட்டான் (தானியேல் 6'ம் அதிகாரம்  ).

சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ , என்பவர்கள் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டென்று எண்ணாமல் பொற்ச்சிலையை வணங்காமல் , அக்கினிக்கு தங்களை ஒப்பு கொடுத்தனர் , தேவனை அக்கினிக்கு இறக்கினார்கள் (தானியேல் 3).

மோசே பார்வோனுடைய மகன் எனபடுவதை வெறுத்து துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்துகொண்டு , கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் (எபிரெயர் 11 : 24 -26) ,ஒரு நாட்டையே வழிநடத்தினான் , தேவனை நண்பன் ஆக்கினான்....
எஸ்தர் தன்னை விட்டுகொடுத்ததினால் 120  நாடுகளிலுள்ள மக்களை காப்பாற்றினாள்(எஸ்தர் 1)
பவுல் தனக்கு இருக்கும் முள் மிக பாரமாய் இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் எத்தனை ஊழியங்களை செய்தான் ,எத்தனையோ நாடுகளுக்கு கிறிஸ்துவை கொண்டு சென்றான் .
வில்லியம்கேரி ஊழியத்திநிமிதம் தன்னுடைய மகனை இழந்த நிலைமைலே சவத்தை அடக்கம் செய்யக்கூட வழி இல்லாமல் தானே தன்னுடைய மகனுடைய சவத்தை தானே அடக்கம் செய்தார், அதை பார்த்த அவரது மனைவிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, அவர் ஆயிரக்கணக்கான மக்களை தேவனுக்கென்று ஆதாயப்படுத்திகொண்டார் என்று வரலாறு சொல்லுகிறது . ஏன், எதற்காக இந்த பாடுகள்...., நீங்களும் நானும் தேவனை அறிந்துக்கொள்ள ...
 எத்தனையோபேர் தங்கள் உயிரையும் பாராமல் கிறிஸ்துவை அறிவித்ததினால் நாம் இன்றைக்கு இத்தனை சுகங்களோடு ,கல்வியோடு, அறிவோடு , கிறிஸ்துவோடு இருக்கிறோம் , இதை மறந்து நாம் எப்படி இருக்கமுடியும் ...
நாம் எதை ஆண்டவருக்காக, மற்றவருக்காக  இழக்க ஆயத்தமாய் இருக்கிறோம்?
இயேசு தன் மரணதருவாயிலும் தன் வலியையும் , தன்  வேதனையை பாராமல் ஒரு கள்ளனை ஆதாயப்படுத்திக்கொள்வதை வேதத்தில் பார்க்கிறோம் ... எது நம்மை தடுக்கிறது ,,, நம்முடைய STATUS  , நம்முடைய பெருமை, மன்னிக்க முடியாதத்தன்மை, நம்முடைய கசப்பு, நம்முடைய  வேதனை,   எது நம்மை தேவனிடம் இருந்து தடுக்கிறது, அல்லது எது தேவனை நம்மிடம் கிரியை செய்யவிடாமல் தடுக்கிறது, விட்டுக்கொடுப்போம் அருமையானவர்களே விட்டுக்கொடுப்போம் , தேவனுடைய மகத்துவத்தை காண்போம் ...!
ஆதலால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து இருக்க .... சாக்கு சொல்லவே முடியாது ... இப்படி செய்யாமல் போனால்  உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்று நாம் பொய் சொல்லுவதாக இருக்கும் ... மாற்றத்தை விரும்பி நம்மை  மாற்றிகொள்வோம்... 
                                                         செய்தி : (தேவன்- சார்லஸ் தாசன் மூலமாக ...)

கேள்வியின் நாயகனுக்கு இன்னுமொரு பதில் ..ஆம் ... நான் ஜெபிப்பதில் சோர்ந்துவிட்டேன் , தேவனிடம் கேட்டேன் , என்னிடம்  என்ன கோளாறு  , எதை நான் சரி செய்ய வேண்டும் என்று , சரியான பதில் . செய்தி முடியும்முன்  ஓவென்று கத்தி அழ வேண்டுமென்று  இருந்தது எனக்கு , அழுகையும் வந்துவிட்டது ,என்னை அடக்கிகொண்டேன், எனக்குள் ஏதோ செய்தது  . ஏனென்றால் , ஏசாயா  : 4  படி அவர் என்னை காலைதோறும் எழுப்புகிறார், நானோ எழுந்து என் பணியை செய்யாமல் வேறு  எதையாவது யோசித்து கொண்டு இருக்கிறேன் ,சில நேரங்களில் மட்டுமே ஜெபிக்கிறேன் ... என் இந்த  நிலைமை மாற்றப்பட வேண்டும், நான் என்னை மாற்றிக்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்வராக.....ஆமென்.  

Sunday, November 21, 2010

நம்மை விட்டு கொடுப்போம் , ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம்

நேற்று மாதத்தில் 3 வது   சனிக்கிழமை , ஆம்மாம் என்ன அதற்கு ? என்று கேட்கலாம் , 3 வது சனிகிழமை என் வீட்டில் ஜெப கூடூகை , ஆரம்ப ஜெபத்தை தொடர்ந்து 2  பாடல்  பாடினோம் , பின்னர் சாட்சி  (தேவன் கடந்த மாததில் என்ன நன்மை செய்தார் என்று சொல்ல வேண்டும்) . எல்லாரும் சாட்சி சொன்னோம் , பின்னர் செய்தி ....
வேதத்தில் இருந்து ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிபடையில் நம்முடைய வாழ்வில் நாம்  எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் எப்போதும் செய்தின் அடிப்படையாக இருக்கும் .எல்லா செய்தியும் அப்படிதானே .
இதில் என்ன வித்தியாசம் என  கேள்வி வரும் , கேள்வின் மன்னனான எனக்கு இப்படி தான் கேள்விகள் உதிக்கும் .
ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் செய்தி எதுவாய் இருந்தாலும் நான் என்னை விட்டு கொடுக்கும்போது செய்தி தன்  வேலையை செய்ய ஆரம்பிக்கும் , இது என்னுடைய  அனுபவம் !   எதை விட்டு கொடுக்கவேண்டும் என்பது அந்த நேரத்தில் நமக்கே தெரியும் , இதைதான் ஆவியானவரின் இடைபடுதல் என்று சொல்லுகிறார்கள் .

சரி  செய்திதான் என்ன ?  ஆதியாகமம் 31 : 25 - 34
யாக்கோபு என்னும் ஒருவன் தான் குடும்பத்துடன் தன் மாமனார் வீட்டிலிருந்து தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் எடுத்து கொண்டு மாமானாருக்கு தெரியாமல் புறப்பட்டு வந்து விடுகிறான் .
அவனுடைய மாமனாரின் பெயர் லாபான் -எப்போதுமே லாபத்திலே கண்  அவனுக்கு .
தன் மருமகன் என்றும் பாராமல் பத்து முறை அவன் சம்பளத்தை மாற்றினான் ,
யாக்கோபு தன் மாமாக்கு தெரியாமல் வர இதுவும் ஒரு காரணம் , ஆனால் யாக்கோபுக்கு தேவனுடைய இரக்கம் இருந்ததினால் அவன் மாமா எத்தனை முறை சம்பளத்தை மாற்றினாலும் தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார் !
யாக்கோபுவுக்கு   இரண்டு மனைவிகள் , இருவரும் சகோதரிகள் , லாபானின் மகள்கள் .
யாக்கோபு புறப்பட்டு வரும்போது  அவனின் 2வது மனைவி ராகேல்   தன் தகப்பனுடைய சொருபங்களை திருடி கொண்டு வந்துவிடுகிறாள், இதை தேடி லாபானும் பின் தொடர்ந்து வருகிறான் . இது யாக்கோபுவுக்கு தெரியாது . லாபான் வந்து யாக்கோபுவிடம் தன் சொருபங்களை காணவில்லை  என்று சொல்லி அவர்களுடைய கூடாரங்களை சோதனை செய்தான் . . . நிற்க. . .
இதற்கும் நமக்கும் என்ன ...நாம் தெரிந்தோ தெரியாமலோ கண்டிப்பாக பாவம் செய்கிறோம் , இது பிசாசின் காரியமாக இருக்கிறது எனவே அவன் நம்மை பின் தொடர்ந்து வருகிறான் ,சோதனைகளும் சேர்ந்து தான் ...!
இதை தான் இயேசு : இதோ இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார் ....ஏனென்றால் அவர் பாவம் அறியாதவராய் பூமியில் வாழ்ந்தார் .... நாம் சோதிக்கபடாதபடி பாவம் செய்யாமல் இருப்போமாக என்று வேதம் சொல்லுகிறது . ஏனென்றால் பாவம் பிசாசின் காரியமாய் இருக்கிறது ,நாம் அதற்கு இணங்கி கொடுக்க வேண்டாம் .
அடுத்து, ஆதியாகமம் 32 : 24   யாக்கோபு தன்  சகோதரனுக்கு பயந்து தனியே  இருக்கிறான் . சகோதரன் தன் சொந்த மாம்சம் . இப்பொது மாம்சம் நாமை தொடர்கிறது . மாம்சத்தின் காரியங்கள்  வெளியரங்கமாய் இருகிறது என்று கலாத்தியர் 5 : 19 - 21   சொல்லுகிறது . ஆனால் ஆவியின் கனியோ ... அதற்கு எதிரிடையாக இருக்கிறது  கலாத்தியர்  5 : 22 - 25 .
என்று வேதம் சொல்லுகிறது . ஆதலால் பிசாசுக்கும் , மாம்சத்துக்கும் இடம்கொடாமல்
நம்மை  விட்டுகொடுத்து  தேவனுக்கு பிரியமாய் வாழ்வோமாக .... !
இதுதான் செய்தி ... நம்மை விட்டு கொடுப்போம் , ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம்  ....

நம்ப முடியவில்லை...! அது ஒரு இனிய நாள்

அது ஒரு ஞாயிறு (sunday)... இனிய காலை நேரம் . ஆம் சபை கூடி வரும் நேரம் .அன்று என் நண்பரை சபைக்கு அழைத்து செல்வது என் எண்ணம் , அதற்கு காரணமும் உண்டு . அது ஒரு வித்தியாசமான தருணம் ...ஆம் ! உண்மை  தான் .அது   ஒரு வித்தியாசமான தருணம்  ... அவரது வீட்டிற்க்கு  சென்றேன் , வீட்டு  முற்றத்தில்  55 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அழுது கொண்டு நின்றார் ..... முகமெல்லாம் கண்ணீர் ...அச்சச்சோ  சோகத்தின் விளிம்பில் நின்றார் அவர் ... எனக்கு அப்பொழுது தெரியாது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அது என்று ... நண்பர் வந்தார் . இருவரும் இரு-சக்கர மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவர் சொன்ன அந்த வார்த்தை என்னை அதிகமாக யோசிக்கவைத்துவிட்டது , நல்லவர்களுக்கே எப்போதும் பிரச்சனை என்பது தான் அது .

ஏன் அப்படி .?

கடவுள் என்னதான் செய்கிறார் ....நல்லவர்களையே தேடி தேடி சோதிக்கிறாரா ?

கேள்வியின் மேல் கேள்வி ... அந்த கடவுளிடம் ...

சபையின் வாயிலை அடைந்தோம் .
வண்டியை நிறுத்திவிட்டு சபைக்கு செல்வதற்காக முதல் படி எடுத்து வைக்கும் நேரத்தில் மின்னல் போன்ற ஒரு எண்ணம் ,,,

நம்ப முடியவில்லை. ஆம் என் கேள்விக்கு  பதில் தான் அது !

அக்கினியில் தான் தேவனை பார்க்க முடியும் ,
இது தான் அந்த எண்ணம் .
அது ஒரு வேத பகுதி.  நான் ஏற்கனவே  ஒரு முறை என் சிறு வயதில்
படித்த பகுதி தான் அது வேதத்தில்(bible) இருந்து  ... என் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, கூடவே சந்தேகம் ஒரு பக்கம் , உண்மையாகவே தேவனுடைய வார்த்தைதான என்று ?

ஆம் சந்தேகம்  வேண்டாம் அது தேவனுடைய வார்த்தை தான் , என் மனம் தெளிவானது
கேள்வியில் இருந்து மீண்டது ,தெளிந்த நீரோடை போல் இருந்தது அப்பொழுது எனக்கு  !
அது தானியேல் 3 : 25 .
 ஒரு பக்கம் கொழுந்து விட்டெறியும் நெருப்பு .
மறு பக்கம் ராஜாவின் பொற்சிலை.
 இன்னொரு பக்கம் தேவன் .
 பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும் ,தேவனுக்காக பொற்சிலையை வணங்க மறுத்தால்........அடுத்த கணம் தீக்கு இரை ஆகவேண்டும் என்பது ராஜாவின் கட்டளை .ஏற்கனவே  கைதியாக கொண்டுவரப்பட்டவர்கள் சாத்ராக் ,மேஷாக்,ஆபேத்நேகோ எனவே நிச்சயமாக ஒரு பெரிய பாடுகள் ,துன்பங்கள் ,பயம் இவையெல்லாம் இருந்து இருக்கும் .
 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் தாரள மனபாங்கு, அடிமைகளுக்கு பயிற்சி, அரசாங்க வேலைக்காக ,தேர்ச்சி பெற்றனர் மூவரும் . அந்நிய நாட்டினில் அடிமைக்கு அரசாங்க வேலை கிடைப்பதே பெரிய விஷயம் !  இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா ?
ஊரோடு ஒத்து போவது தானே அறிவாளிக்கு அழகு !
பொற்சிலையா அல்லது தேவனா ?
பொற்சிலையை வணங்கினால் உயிர் தப்பும்.

யோசிக்கவில்லை அடுத்தகணம் அந்த 3 பேரும் எடுத்த முடிவு
  தேவனை அக்கினியில் இறக்கியது ...!        என்ன ஒரு பதில் என் மனதில் .... நம்ப முடியவில்லை...!
அது ஒரு இனிய நாள் ...!

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...