Saturday, March 30, 2019

மத மாற்றமா மன மாற்றமா?

       தற்போது நாட்டில் நடக்கும் முக்கால்வாசி பிரச்சனை மதம் சம்பந்தப்பட்ட தாக இருக்கிறது . பலர்  கிறி ஸ்துவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டு கிறித்துவர்கள் மீது வைக்கப்படுகிறது .   உண்மை என்ன?  கிறிஸ்துவம்  என்றால் என்ன என்று பார்த்தால் நலமாயிருக்கும்.

     மாம்சத்தில் வந்த ஏசுகிறிஸ்துவை  அறிக்கை பண்ணாத எவரும் ராஜ்யத்திற்குள் ( பரலோகத்திற்குள் ) பிரவேசிப்பதில்லை.

    ஒருவன் மறுபடி பிறவாவிட்டால் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதில்லை .
      மறுபடி பிறப்பதா ?   எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்....ஒருவர் ஏசுவே தேவன் என உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு மனம் போன போக்கிலே           நடக்காமல்  வேதத்தின் அடிப்படியில் நடப்பேன் என முடிவெடுப்பது , ஏசு  , என் பழி பாவதிற்க்காக சிலுவையில் தண்டனையை  ஏற்றார் ,  எனக்காகவே மரித்தார் என நம்பி ஞானஸ்தானம் பெறுவதே மறுபடி பிறப்பது . அது மட்டுமல்ல முடிவு பரியந்தம் இதில் நிலை நிற்பவனே பரலோகம் போக முடியும் என வேதம் (  BIBLE ) என சொல்லப்படும் புத்தகத்தில் எழுதி இருக்கிறது . எனவே  இங்கே கிறிஸ்துவர்களாக மதம் மற்ற படுகிறார்கள் என்ற கூற்று தவறு . சிலர் சொல்லுகிற படி மேலே குறிப்பிட்டவற்றை தவிர வேற காரணங்களுக்காக
கிருத்துவர்களாக ஆகினார்கள் என்றால் அவர்கள் வெறும் பேருக்கு கிறிஸ்துவர்களே அல்லாமல் அவர்களால் பரலோகம் போக முடியாது .

     இன்னொரு விதமாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு  நண்பராக வேண்டுமென்றாலே இவருடைய கருத்துக்கள் ஒத்து போனாலொழிய அவர்கள் நண்பர்களாக வாய்ப்பில்லை. கருத்துக்கள் ஒத்து போக வேண்டும் , பிறகு பழக்க வழக்கங்கள் பிடிக்க வேண்டும் , இப்படி தான் நட்பு வளர ஆரம்பிக்கும் . நண்பராகவே இவ்வளவு பார்க்கும் நாம் அப்படி சட்டென்று மதம் மாறுவோமா என்ன ?
        மதம் மாறுதல் என்பது வெறும் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை என  என்னே தான் சட்டம் சொன்னாலும் அது ஒருவருடைய தனிப்பட்ட காரியமாக மட்டுமே  இருக்காது . ஒருவர் மதம் மாறும்போது அவருடைய குடும்பத்தை அவர் எதிர்கொள்ளவேண்டும் . அவர்கள் அதற்கு ஒத்துப்போகவில்லை என்றால் அவ்வளவு தான்.மதம் மாறியவர் இங்கேயே நரகத்தை பார்க்கவேண்டியது தான் . அதன் பிறகு எல்ல குடும்ப நிகழ்வுகளிலும்  பங்கு கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை . இதை எல்லாம் தாண்டி ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறார் என்றால் அது மத மாற்றமா அல்லது மனமாற்றமா  ?

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...