Wednesday, December 29, 2010

மோர் மிளகாய்

 ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் மாலை 7 மணிக்கு எங்கள் சபையிலே  வேதப்பாடம் (பைபிள் STUDY) உண்டு . ஆனால் நேற்றிலிருந்து புதிய வருடத்திற்க்கான ஆயத்த கூட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தது. நானும் என்னை ஆயத்தப்படுத்துவதற்காக சென்றிருந்தேன். தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும்போது போதகர் சொன்ன கருத்து என்னை உற்ச்சாகப்படுத்தியது, அது சமையலை  பற்றியது . நம் உணவு வழக்கத்திலே சில உணவு வகைகளை ஊற வைத்து பின் சமைப்பது உண்டு , மோர் மிளகாய் எடுத்துக்கொண்டால் , அந்த மிளகாய்  ஊற ஊற அதின் கார தன்மை மாறி வேறே சுவை வந்து விடுகிறது, அது ஊறிவிட்டால்  பிறகு அது தன் பழைய காரத்தன்மைக்கு திரும்புவதில்லை.  அதே போலத்தான் நாமும் தேவனோடு இணைந்து  இருக்க , தேவனுக்குள்ளாக எந்த அளவுக்கு இருகிறோமோ அவ்வளவு  நம்முடைய தன்மைகள் மாறி  தேவனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்துவோம் .... தேவனுக்குள் நாம் ஊற, ஊற அவருடைய சத்துவங்களை நாம் உட்கிரகித்து கொள்வோம் . யோசித்துப்பார்த்தேன் எவ்வளவு உண்மையான கருத்து இது .  நாம் தேவனோடு இருக்க , தேவனுக்குள்ளக இருக்க நம்முடைய QUALITIES  மாறி விடுகிறது ....இதற்க்கு என்னை நான் விட்டுகொடுக்க தேவன் எனக்கு உதவி செய்வாராக ....ஆமென்.   

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...