Saturday, October 22, 2011

எசேக்கியா ராஜா - அறிமுகம்.

எசேக்கியா ராஜா - அறிமுகம். 

கடந்த வாரங்களில் நடந்த வேதப்பாடங்களில் நான் கேட்டது.
செய்தி : சார்லஸ் தாசன்.

II இராஜாக்கள்
18 அதிகாரம்

    1. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
    2. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
    3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
    2  நாளாகமம் 29 
    1. எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
    2. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
    எசேக்கியா ஆகாஸ் ராஜாவினுடைய குமாரன். இவன் தன் தகப்பன் மரித்தபின்பு தன்னுடைய 25 வயதிலே ராஜாவாகிறான். 
    எசேக்கியா என்றால் யேகோவா என் பெலன் (Jehovah is my strength) என பொருள். 
    II இராஜாக்கள்
    18 அதிகாரம்
    3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
    மற்ற எல்லா ராஜாக்களை பார்த்ததால் தன் தகப்பனாகிய தவிதைப்போல கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கும் , 
    யோசபாத் ராஜாவுக்கு தன் தகப்பனாகிய தாவிதின் முன் நாட்களில் நடந்தது போல என குறிப்பிட்டு இருக்கிறது .(2 நாளாகமம் 17- 3) 
    ஆனால் எசேக்கியாவோ தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செமையானத்தை செய்தான்.
    சரி இவன் இப்படி செய்ய காரணம் என்ன ? இவன் வளர்ந்த சூழ்நிலைதான் என்ன ?  என்று பார்த்தால் நாம் அவனுடைய தகப்பனாகிய ஆகாஸ் ராஜாவினுடைய வாழ்க்கையை ( http://prithiviraj23.blogspot.com/2011/09/blog-post_29.html ) சற்று பார்க்க வேண்டும். ஆகாஸ் ராஜா தன் தேவனாகிய கர்த்தரை விட்டு அந்நிய தெய்வங்களின் உதவியை நாடினான் . அவைகளுக்கு பலிபிடங்களையும் கட்டினான் , அவனால் யூதா நாடு முழுவதும் சிறுமைப்பட்டு போவதாக வேதம் கூறுகிறது. 
    இந்த பாதகமான சூழ்நிலையில் எசேக்கியாவை  கர்த்தரின் மேல் பற்றுதலாய் அவன் தாய் வளர்த்தாள். அவன் தாயின் பெயர் ஆபி (அபியாள்
    யார் இந்த அபியாள் ?
    II இராஜாக்கள் 18 அதிகாரம் 2 வசனம் 
    சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி ( அபியாள் ). 
    அபியாள் என்றால் யேகோவா என் தகப்பன்Jehovah is my father ) என பொருள்.
    சகரியா தன் மகளை கர்த்தருக்குள் வளர்த்தான். அப்படியானால் யார் இந்த சகரியா என்று நாம் பார்க்கத்தானே வேண்டும். 
    II நாளாகமம் 26 அதிகாரம் 5 ஆம் வசனம்
      தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; 
      சகரியா என்பவன் தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்தான் என வேதம் சொல்லுகிறது. இவன் ராஜாவாகிய உசியாவை கர்த்தர் பக்கமாக திருப்பினான். 
      நம்முடைய நண்பர்கள், நமக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் தேவனிடமாக நம்மை வழி நடத்துகிறார்களா ? அவர்களுடைய ஆலோசனைகள் வசனத்திற்கு ஒத்து இருக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும் . 
      உசியாவிற்கு சகரியா ...
      எசேக்கியவிற்கு அபியாள் ... நமக்கு ...?  
      அபியாள் தன் மகனை கர்த்தரிடம் பற்றுதலாய் வளர்த்தாள். அவனும் எல்லாவற்றிலும் கர்த்தரை தேடினான். கர்த்தர் அவனை கட்டினார். 
      சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் கர்த்தரிடம் பற்றுதலாய் இருப்போம். இதற்கு நம்முடைய ஐக்கியம் மிகமிக முக்கியம். இதனால் தான் சபை கூடிவருதலை அசட்டை செய்யாதீர்கள் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. 
      அபியாள் தன் மகனை சரியாய் வளர்த்தாள். அவன் தன் நாட்டு மக்களை கர்த்தரிடமாய் திருப்பினான். 
    உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்.




          ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

                 அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...