Saturday, January 1, 2011

திறவுகோல்

திறவுகோல் ... தேவன் என்னிடம் மிக தெளிவாக விளக்கிய செய்தி ...

இந்த வார்த்தையை பற்றி  நான்  KEY AND THE KEY ANSWER என்ற  தலைப்பிலே தேவன் என்னிடம் விளக்கியதை உங்களுக்கு என்னால் முடிந்தவரை  கொடுக்க  விரும்புகிறேன் ....

DO NOT RUN BEHIND THE GIFTS BUT KEY (ஆசிர்வாதத்தை நாடாமல், திறவுகோலை நாடுங்கள்) இதுதான் அந்த செய்தி சுருக்கம்.

வெளி 3 :7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
 ஏசாயா 22 : 20. அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: 21. உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான். 22. தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.


       உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்...... என வேதம் சொல்லுகிறது . இருக்கிற கொஞ்ச பெலத்தோடே கர்த்தருக்காக நிற்கும் பொது , வசனத்தை முழுமனதோடு பின்பற்றும்போது வாசல் திறக்கப்படுகிறது அல்லது தேவன் திறந்து நமக்கு முன்பாக அதை வைக்கிறார் . இதுவும்  திறவுகோலை பெறும்  வழி .


      தேவன் திறந்தால் யாரும் பூட்ட முடியாது, அவர் பூட்டினால் யாரும் திறக்க முடியாது. ஆனால் அவர் எலியாக்கிம்கு திறவுகோலை தருகிறார். அவன் திறந்தால் யாரும் பூட்ட முடியாது, அவன் பூட்டினால் யாரும் திறக்க முடியாது. எலியாக்கீம் என்றால்  - தேவனால்  ஏற்படுத்தப்பட்டவன் (PERSON SET BY GOD)என்று  அர்த்தம். தாவீதின்  பண்டகசாலையில் அநேகம் ஆயிரம் பொக்கிஷங்கள் உண்டு, அதின் சாவியைத்தான் தேவன் நமக்கு தருகிறார். சரி  திறவுகோலை பெறுவதைபற்றி  நாம்  ஏசாயா  22 :20 ல்   பார்த்தோம் 
எபேசியர் 1 : 
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஏற்க்கனவே அவர் நம்மை ஆசிர்வதித்து விட்டார்
ஒரு நல்ல வெற்றி என்பது ஒருமுறை பெறுவது அல்ல ,பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுவது . (GOOD SUCCESS IS A SUCCESS WHICH  SUSTAINED FOR EVER  )
எப்படி திறவுகொலை  தக்கவைத்துகொள்ளுவது ?
யோசுவா  1 :8 
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

திறவுகோலை தக்கவைத்துக்கொள்ள சிலவற்றை கைக்கொண்டுத் தான் ஆகவேண்டும் .
1 :நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க வேண்டும் . need to be a trusted one .... if god  trust me  he might have give something which is valuable . உணமையாய் இருந்தால் மட்டுமே தேவனிடத்திலே எதையும் எதிர்பார்க்கலாம் . இதைத்  தான்  கொஞ்சத்தில் உண்மையாய் இரு அனேகதிற்கு அதிகாரியாய் வைப்பேன் என்று தேவன் சொல்லுகிறார் . கொஞ்சம் பணத்தில் உணமையாய் இருந்தால்  அதிக பணம் , கொஞ்சம் அதிகாரத்தில் உண்மையாய் இருந்தால் அதிக அதிகாரம் , கொஞ்சம் நண்பர்களிடத்தில் உணமையாய் இருந்தால் அதிக நட்பு,  இப்படித்தான்......  நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க வேண்டும் .
நம்பிக்கைக்கு பாதிரவானாய் இருக்க என்ன செய்ய வேண்டும் ? 
என்னை நான் நம்ப வேண்டும் , என்னை நான் முழுமையாய் நம்ப வேண்டும். என்னை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால், மோசேவைப்போல் ஆரோனை அனுப்பும் என்று சொல்ல நேரிடும் .  

2 . தேவனுடைய தயவை பெறுகிறவனாய் இருக்க வேண்டும் .
தேவனுடைய தயவை பெறுகிறவனாய் மட்டுமல்ல தொடர்ந்து பெருகிறவனாய் இருக்க வேண்டும் . ஆதியாகமம் 37 : 23,24
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
யோசேப்பு தேவனுடைய தயவை பெற்றவனாய் இருந்தான் . ஆனால் அவனது சகோதரரோ அந்த பலவருண அங்கியை கழற்றி விட்டால் அவனுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்றே நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு பலவருண அங்கியால் அங்கிகாரம் இல்லை, பலத்த துருகமாகிய கர்த்தரிடத்தில் அங்கிகாரம் உண்டு என்பதை அறியாமல் இருந்தார்கள். தேவனுடைய தயவு யோசேப்போடு இருந்தது.
தயவு என்பது அநியாயமாய் பாராட்டுகிற அன்பு  .
தேவனுடைய தயவு தொடர்ந்து கிடைக்க யோசேப்பு என்ன செய்தான் ? 

அவன் அவனை காத்துக்கொண்டான்
தொடர்ந்து நம்மை காத்துக்கொள்ளவேண்டும் (எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக்கொள் என்று வேதம் சொல்லுகிறது ) .
1 கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதை  யாராய் இருந்தாலும் பயப்படாமல் அப்படியே சொல்ல யோசேப்பால் முடிந்தது .
2 . அவன் சிறையில் இருந்தபோது கூட, தேவனிடத்தில் தன் நிலைமையை எண்ணி,  ஒரு நாள் கூட  முறுமுறுத்தது   இல்லை .
3 . அவன் வாலிபனாய், வாலிபத்திற்க்கான தேவைகள் இருந்தும்
 தன்னிடம்  இருந்தே தன்னை காத்துக்கொண்டான் ,
தனிமை, தணியாத தாகம் தனகத்தே  கொண்ட பெண், தவிர்க்க முடியாத சூழ்நிலை  - அத்தனையும்  ஒருசேர பலமுறை  அழைத்தது அவனை - தன்னை காத்துக்கொண்டன் .
ஆதியாகமம் 39 : 3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:........
எல்லா இடத்திலேயும் கர்த்தர் அவனோடு இருந்தார் என்று மற்றவர்கள் கண்டார்கள்.
செய்யாத தவறுக்காக சிறை சென்றான் , கர்த்தர் அவனோடு இருந்தார் .
தண்டனையைகூட சலிக்காமல் ஏற்றுக்கொள்ள்கிறான்.
உதவி பெற்றவன் கூட மறந்து விட்டான் - மனம் தளரவில்லை . தன்னை தாழ்த்தினான் , கர்த்தர் அவனை உயர்த்தினார் . சகல அதிகரங்களையும் கொடுத்தார் .
யாக்கோபு 4 :
 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
...................... ஆமென்.  ஆசீர்வத்திதை அல்லது அதின் திறவுகோலை தக்க வைத்துக்கொள்வதற்கு  மனத்தாழ்மை மிக மிக முக்கியம் . வேதத்திலே நாம் பார்க்கும்போது தேவன் பயன்படுத்திய அனைவரும் கர்த்தருக்கு முன்பாக தன்னை   தாழ்த்தினவர்களாகவே இருக்கிறார்கள் என்றும்
தேவன் உள்ளத்தை தான் பார்க்கிறார் என்றும் மேன்மைக்கு முன்னானது தாழ்மை என்றும் வேதத்தில் நாம் பார்க்கலாம் .

இந்த பதிவு உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன் 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...