Saturday, January 15, 2011

தமிழர்(மனிதர் ) திருநாள்

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் ....

இத்திருநாளில் தன்மானத் தமிழர்களாகிய நாம் ,
தரம் குறையாத தமிழர்களாய் வாழ உறுதி ஏற்ப்போம் ...

தரம் என்று சொல்லும் போது  அன்பு ,உண்மை , மானம் , வீரம் ,பேராண்மை,  பண்பு உடையவராய் விட்டுகொடுப்பதை மட்டும் விட்டுக்கொடுத்து மற்றவற்றிற்கு இல்லை
என்று மார்த் தட்டி நிற்பது... (இன்னொரு வார்த்தையில் சொன்னால் இது மனிதம் தானே)
தரம் (QUALITY ) என்று மட்டும் சொன்னால் போதுமா ...
தரம் நிரந்தரம் என்று எப்பொழுது சொல்ல போகிறோம் .

தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா  என்ற வாசகம் மேடை பேச்சுகளில்  பழகிவிட்ட  காலம் இது .
தரம் நிரந்தரம் என்ற நிலை வந்தால்  தமிழன் தலைவன் என்ற வழக்க சொல் வழக்கமாகி போகும் !

தமிழை மது என்று சொல்லி பருகி மயக்கமடைந்தோர் பலர்.
அவர்கள் மயக்கம் தெளியும் நாள் எந்நாளோ ?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே  .
அமுதாகிய தமிழும் அப்படித் தான்  . தமிழ் அப்படித்தான் பருக பருக பரவசம் தரும், மயக்கம் வரும். தமிழின் மயக்கத்திலே, தமிழன் தமிழ்(மனிதத்தின் ) பண்பினை இழக்கலாமா ?

எல்லாவற்றிலும் உலக தரத்தை விரும்பும் நாம்  பண்பில் தரத்தை, தரத்தின்  நிரந்தரத்தை விரும்பாதது ஏன் ?


வேதம் மனிதத்தின் தரத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரு வழியை கற்றுத்தருகிறது  .

 பிலிப்பியர் 4: 8
   கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...