Saturday, January 22, 2011

மிக அருகில் இருந்தும் மிக தொலைவு (SO CLOSE BUT YET SO FAR)

மிக அருகில் இருந்தும் மிக தொலைவு (SO CLOSE BUT YET SO FAR).....
2 நாட்கள் முன்பு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், நானும் என் நண்பனும் மின்சார ரயிலில் வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தோம் . என்னுடைய இறங்கும் நிலையம் வந்துவிட்டது , எனவே நான் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு இறங்க ஆயத்தமானேன் . அவனோ... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....  இன்னும் 25 நிமிடங்கள் நான் போக வேண்டும் என்றான் , உடனே நான் , என்ன அடுத்த 5 நிமிடத்தில் உன்னுடைய இறங்கும் நிலையம் வந்துவிடுமே என்றேன் ! . அவன் சொன்னான், எங்க வரும் , வண்டியை வழக்கம் போல signal ல் நிறுத்தி விடுவார்கள் என்றான் . உடனே எனக்கு இதுதான் ஞாபகம்  வந்தது. அவன் இறங்கி நடந்தாலே போதும் 15 நிமிடத்தில் வீட்டிற்கே  போய் சேர்ந்து விடுவான். இப்படித்தான் நாமும் நம்மை காண்கின்ற  தேவனை நாம் காணாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டு இருக்கிறோம். அவருக்காக நேரம் ஒதுக்கினாலே போதும் நாம் அவரை மிக அருகிலே ஒரு நண்பனை போல காண முடியும். அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் அவர் நமக்கு மிக அருகில் இருந்தும் நாம் அவரை  காணமுடியாது . இது நம் வீட்டை எதிரிலேயே வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவதுபோலத்தான் . இதை தான் வேதம் கர்த்தரிடத்தில் சேருங்கள், அவர் நம்மிடத்தில் சேருவார்  என்று சொல்லுகிறது.

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...