Sunday, January 2, 2011

முதல் காதல்

இன்று  சபைக்கு சென்றிருந்தேன் ...ஆராதனை வேளையில் போதகர் சொன்ன கருத்து.உங்கள் சிந்தனைக்காக ... இது முதல் காதலை பற்றியது, நாம் அனைவரும் இந்த அனுபவத்தினூடே வந்திருப்போம் என்று நம்புகிறேன்.  நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போது, அது நட்ட்பாக,காதலாக அல்லது திருமணமாக இருக்கலாம், 3   சூழ்நிலைக்கும் இது பொருந்தும். இந்த அன்பை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் நேசத்தை சொல்ல வார்த்தைகள் பொருந்தாது. எடுத்துகாட்டாக சொன்னால் இந்த ஆரம்ப காலக்கட்டத்தில்  ஏதாவது  ஒரு சிறு பரிசை ஒருவர் இன்னொருவருக்கு கொடுத்தால் கூட அது  அவருக்கு விலை மதிக்கமுடியாத ஒரு பொக்கிஷமாகவே இருக்கும், எந்த காலக்கட்டத்திலும். நாட்கள் செல்லச்செல்ல எவளவு பெரிய பரிசு கொடுத்தாலும் அதிலே சுவாரசியம் இருக்காது. இப்படித்தான் கர்த்தரை தேட ஆரம்பித்த புதிதில் அதிக நேரம் ஜெபிப்பது, ஊழியம் செய்வது என்று பேச்சு முச்சு எல்லாமே  கர்த்தர் என்று இருப்போம் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல  தொய்வு ஏற்ப்பட்டு விடும். இதைத் தான் வெளிபடுத்தின விசேஷம் 2 :4
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்று கர்த்தர் எபேசு சபைக்கு சொலுகிறார் . எபேசு சபைக்கு மட்டும் அல்ல நமக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான் இந்த வசனம் ... அந்த முதல் காதல் அனுபவத்தை, ஆதி அன்பை விடாமல் தொடர வேண்டிய அவசியம் நமக்கு உண்டு ....

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...