Tuesday, March 15, 2011

கடைசி காலத்தின் கடைசி மணித்துளிகளில் நாம்...

கடைசி காலத்தின் கடைசி மணித்துளிகளில் நாம் நின்றுக் கொண்டு இருக்கிறோம் என்பதை எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒத்துக்கொள்ளக்கூடும் என்றே நினைக்கிறன். 
சமிபத்தில் ஜப்பானில் நடந்த நிலநடுக்கம் ஒட்டு மொத்த உலகத்தையே அசைத்துவிட்டு இருக்கிறது . 
ஜப்பான் தீவே 8 அடி நகர்ந்து விட்டது என்று சொல்லுகிறது ஆய்வு  அறிக்கைகள்.
ஏற்கனவே இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் சுனாமி பேரலைகளை உண்டாக்கி பல நாடுகளை தாக்கியது . இந்தோனேஷியா, இலங்கை,தென் இந்தியா-இவைகள்  வெகுவாக பாதிப்படைந்தது .
இது ஒட்டு மொத்த உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு உலக நில அமைப்புகளை மாற்றிவிட்டது . 
நம்மை சுற்றி நடக்கும்  அத்தனையும், நாம் கடைசி காலத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே சொல்லுகிறது. மன்னிக்கவும் எச்சரிக்கிறது . 

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி, உலக மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்து இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது. 
ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் , ஜனத்திற்கு விரோதமாக ஜனமும் எழும்பும் என்ற வேத வசனம் கடைசி கால அடையாளமாகவே சொல்லப்பட்டு இருக்கிறது . 

 சமிப காலத்தில் நடந்து முடிந்த அல்லது இன்னும் முற்றுப்பெறாத , ஈராக்- அமெரிக்கா போர் , இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் , சீனாவின் அதிகாரப்பூர்வ ஆயுத அறிவிப்பு, ஆப்கானிஸ்தான் - தலிபான்களுடன் நடந்த போர், எல்லை தாண்டும் பயங்கரவாதம், இஸ்ரேல்- பாலஸ்தீனா ஓயாத சண்டை இவை எல்லாம் இந்த வசனத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது.

பஞ்சம் , கொள்ளை நோய்களை பற்றிக் கேள்விபடுவீர்கள் - என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. பஞ்சத்தால் இன்னும் சோமாலியா நாட்டவர்கள் கடல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள், நோய்களுக்கோ அளவே இல்லை . 

எச்சரிக்கை . எச்சரிக்கை . எச்சரிக்கை . 

கடலோ கொந்தளிக்கிறது , ஜனங்களோ தத்தளிக்கிறார்கள், காலமோ எச்சரிக்கிறது. .
நமுடைய பாவங்களுக்காக அடிக்கப்பட்டு, நமுடைய மீறுதலுக்காக நொறுக்கப்பட்ட , நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்த தீர்த்த , நமக்கு சமாதானத்தை உண்டுப்பன்னும்படி ஆக்கினை தீர்ப்படைந்த, கர்த்தரும், இரட்சகருமான  இயேசுவை உங்கள் மனதிலே ஏற்றுக்கொள்ளுங்கள், பரலோகத்தை பிடித்துக்கொள்வீர்கள். அழியாத ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வீர்கள் ..

இதெல்லாம் தெரியும் என்பவர்களுக்கு - அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம் . அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி உங்கள் எஜமானனை வேண்டிக்கொள்ளுங்கள் . 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது . 
உங்கள் கருத்துக்களை prithiviraj23@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள். 

ஊற்று கேட்கும் தேவன் உடனடி பதில் - 2 : மேவிபோசேத் - கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு கலங்காதே

       அப்பொழுது நானும் ஏன் குடுபத்தினரும் சபைக்கு சென்றுக்கொண்டிருந்தோம் . சில நாட்களாக பிரச்னைககளால் மனம் நொந்து என் குடுபத்திரிடம் நான...